மேலும் அறிய

Uttarkhand Tunnel Collapse: சுரங்கப்பாதையில் தவிக்கும் 40 தொழிலாளர்கள்! 3வது முறையாக முதலமைச்சருக்கு போன் போட்ட பிரதமர்!

சுரங்கப்பாதையில் 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ள விவகாரம் தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலமாக தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பவர்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம்  தொலைபேசியில் பேசி உள்ளார். இது தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதை அடுத்து,  பிரதமர் மோடி மூன்றாவது முறையாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.  

அப்போது, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மத்திய மற்றும் மாநில அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் போதுமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.  சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு எந்த நேரத்திலும் வழங்கும். சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மன உறுதியை பேணுவது மிகவும் முக்கியம்" என்று பேசியிருந்தார். 

உரையாடலின் போது, சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கு தொழிலாளர்களுக்கு தண்ணீர், உணவு, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதை முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும், மீட்பு பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது. நிபுணர்களின் கருத்துகள் அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகள் தொடர்ந்து ஆய்வு நடத்துகிறேன் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.  மேலும், தொழிலாளர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். 

40 தொழிலாளர்களின் நிலை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.  

சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகாண்ட்,  இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடார்ச்சியாக ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.  ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எப்போது இவர்கள் மீட்கப்படுவார்கள் என எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget