மேலும் அறிய

Adani Group: 'உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் எங்களுக்கும் தொடர்பா?' அதானி குழுமம் பரபரப்பு விளக்கம்!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தரகாசி. உத்தரகாசியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது சுரங்கப்பாதை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த சுரங்கப்பாதையின் நடுவே மணல் சரிந்ததில் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அதானி குழுமம் விளக்கம்:

கடந்த 12-ந் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தால் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தற்போது வரை ஆரோக்கியமாக இருந்தாலும், அவர்கள் மீட்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அதானி நிறுவனம் என்றும், அவர்களால்தான் இந்த அசம்பாவிதம் அரங்கேறியதாகவும் இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்,” உத்தரகாண்டில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சுரங்கப்பாதை விபத்து சம்பவத்தில் எங்களை இணைக்க சில மோசமான முயற்சிகள்  மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சியையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்த பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

சிக்கித்தவிக்கும் 40 தொழிலாளர்கள்:

சுரங்கப்பாதை பணியின்போது 40 தொழிலாளர்கள் சிக்கியதற்கு காரணம் தனியார் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று பலரும் கூறி வந்த நிலையில், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சுவாமி, உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது? அதன் பங்குதாரர்கள் யார்? அதானி குழுமத்தின் ஒரு நிறுவனமா? நான் கேட்கிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு பிறகு அதானி குழுமத்தின் மீது கடும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இந்த சூழலில், அதானி குழுமம் உத்தரகாசி சுரங்கப்பாதை பணிகளுக்கும், தங்களுக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை 15 நாட்களாகியும் மீட்காததால் பொதுமக்கள் அரசின் மீது வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரகாசியில் தற்போது விபத்திற்குள்ளான சுரங்கப்பணிகளை ஹைதரபாத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் நவயுகா என்ஜினியரிங் குழு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Vande Bharat Express: அதிவேகமாக ஓடிகொண்டிருந்த ஒடிசா வந்தே பாரத் ரயில்.. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..!

மேலும் படிக்க: Uttarkashi Tunnel Collapse: 41 தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்.. நிபுணர்களின் கணிப்புகளில் எது சாத்தியமாகும்..?

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Embed widget