Watch Video : திருமண மேடையில் மணமகனுக்கு 'பளார்' விட்ட பெண்! ஷாக்கான கல்யாண வீடு! ஏன் தெரியுமா?
திருமண மேடையில் கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

திருமண மேடையில் மணமகனை பளார் பளார் என அறைந்துவிட்டு, மணமகள் வேகமாக நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான். எளிமையாக நடக்கும் திருமணங்கள் இங்குண்டு, அதேவேளையில் வாரக்கணக்கில் தினம் தினம் கொண்டாட்டம் என நடக்கும் கிரேண்ட் திருமணங்களும் நடப்பதுண்டு. மேளச்சத்தம், பாட்டுச்சத்தம், சிரிப்புச்சத்தம் என மகிழ்ச்சியால் அலங்கரிக்கப்படும் திருமண மேடையில் கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹமிர்பூர் பகுதியில் திருமணம் ஒன்றி நடந்துள்ளது. உறவினர்கள் நண்பர்கள் சூழ திருமணமானது முகூர்த்த நேரத்தை நெருங்கியுள்ளது.மணமகன் கையில் மாலையை வைத்துக்கொண்டு மணமகளுக்கு மாற்ற தயாராகிறார். ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த அந்த மணமகள் மணமகனை பளார் பளார் என இரு அறைகளை கன்னத்தில் விடுகிறார்.
இரண்டு பலமான அறையால் திருமண வீடே அதிர்ச்சியடைந்துள்ளது. மாலை மாற்றும் நேரத்தில் மணமகனின் கன்னத்தை காலிசெய்தது ஏன் என இருதரப்பு உறவினர்களும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு பின்னர் இந்த பிரச்னை தீர்வுக்கு வந்துள்ளது. இதுதான் காரணம் என எதையுமே உறவினர்கள் தெரிவிக்காத நிலையில் இது நிச்சயம் கட்டாய கல்யாணமாக இருக்கலாம் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ஒரு சம்பவம் ஏற்கெனவே உபியில் நடந்தது. காசியாபாத் பகுதிக்கு அருகே ஆக்ராவைச் சேர்ந்த முஜாமில் என்பவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்தச் சூழலில் திருமணம் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு மணமகள் குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாயை வரதட்சணையாக தர வேண்டும் என்று மணமகன் கூறியுள்ளார். இதன்காரணமாக மணமகள் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது அவர்களுக்கு திருமணத்திற்கு முன்பாக முஜாமில் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்தது தெரியவந்தது. அத்துடன் அவருடைய திருமணம் தொடர்பாக படங்களும் அவர்களுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மணமகள் குடும்பத்தினர் முஜாமிலை அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
Muzzamil Hussain from Ghaziabad beaten by girls side when he demanded 10L dowry for his 3rd Nikkah. pic.twitter.com/lyGEchKL9M
— Wali ವಾಲಿ (@Netaji_bond_) December 18, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















