மேலும் அறிய

Pregnant Daughter Murder: கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை.. காதலனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க மறுத்ததால் பெற்றோர் செய்த கொடூரம்..

மனதை பதற வைக்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த அறிக்கைகளுக்கு எல்லாம் வலுச்சேர்க்கும் விதமாக ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்:

இந்த நிலையில், மனதை பதற வைக்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை நெரித்து அவரது பெற்றோரே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை விவரித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், "தனது மகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

இந்த வழக்கில் காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க மறுத்த 19 வயது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என சந்தேகிக்கிறோம். இளம்பெண்ணும், அவரது காதலனும் கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது காதலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர்:

இதை தொடர்ந்து, காதலனுக்கு எதிராக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் காதலனுக்கு எதிராக அந்த பெண் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளார். இதனால், 8 மாத கர்ப்பிணியை அவரது பெற்றோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை இரவு அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, ஷாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோய்லா கிராமத்தில் உள்ள ஆற்றில் அவரது உடல் வீசப்பட்டது" என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சஞ்சீவ் சுமன், "பெண்ணின் பெற்றோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்தப் பெண்ணின் பெற்றோர், காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த பெற்றோர். அவரைக் கொன்றனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: திருவள்ளுவருக்கு காவி சாயம்.. ஐபிஎல் ஃபைனல்.. கார் ஏற்றி பெண் கொலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: திருவள்ளுவருக்கு காவி சாயம்.. ஐபிஎல் ஃபைனல்.. கார் ஏற்றி பெண் கொலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி:
Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி: "ஒரு தேர்வு கூட ஒழுங்கா நடத்தல" மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. கருணைக்கொலை பண்ணுங்க.. கணவர் மனு!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: வைகாசி விசாகம் கொண்டாட்டம்.. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
Trump Threatens Iran: ''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
Embed widget