மேலும் அறிய

அதிர்ச்சி.. சிவனை போன்று பாம்பை தோளில் போட்டு ஊரை சுற்றி வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்..

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பாம்பு பிடிப்பதில் பிரபலமாக இருந்த ஒருவர் விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பாம்பு பிடிப்பதில் பிரபலமாக இருந்த ஒருவர் விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தேவேந்திர மிஸ்ரா என்ற அந்த நபர், தனது கிராமத்தில் உள்ள பக்கத்து வீட்டில் இருந்து பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அதிக விஷம் கொண்ட அந்த பாம்பை மீட்ட பிறகு, மிஸ்ரா அதை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு கிராமத்தை சுற்றி வந்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அந்த நபர் ஒரு குச்சியின் உதவியுடன் பாம்பை பிடிக்கும் காட்சி உள்ளது. மற்றொரு வீடியோவில் அவர் ஒரு பெண் குழந்தையின் கழுத்தில் பாம்பை போடுவதைக் காணலாம்.

மிஸ்ரா, அந்த பாம்பை பிடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரைக் கடித்துள்ளது. பின்னர் அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு மூலிகைகளைக் கொண்டு பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க முயன்றதாக கிராம மக்கள் சிலர் கூறியுள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் தனது வீட்டில் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு வினையாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பை விளையாட்டு தனமாக கழுத்தில் போட்டு சுத்திய நபர் உயிரிழந்துள்ளார். எவ்வளவு பயிற்சி எடுத்திருந்தாலும், பாம்பை கவனமாக கையாள வேண்டும். இப்படி, கவனக்குறைவாக இருந்த இதுபோன்ற சம்பவம்தான் நடக்கும்.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பாம்பு பிரச்னை மிக பெரிய பிரச்னையாக உள்ளது. முன்னதாக, பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். பவானிபூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்குகளில் கோவிந்த் மிஷாரா (22) கலந்து கொண்டார்.

பாம்பு கடித்ததில் இவரும் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ராதா ராமன் சிங் கூறுகையில், "தூங்கி கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து கோவிந்த் மிஷ்ரா உயிரிழந்தார். அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் பாம்பு கடித்துள்ளது. பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோவிந்த் மிஷ்ரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள லூதியானாவில் இருந்து கிராமத்திற்கு வந்தனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget