மேலும் அறிய

சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 

மெஹ்தாப் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின் இல்லத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

 

சாப்பாடு பரிமாற தாமதமானதால் மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுளி நகரில் ஹமீத்பூர் கிராமத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி மெஹ்தாப் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின் இல்லத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மணமகளின் குடும்பத்தினர் விருந்தினர்களை அன்புடன் வரவேற்றனர், ஆனால் மெஹ்தாபின் உறவினர்கள் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மீண்டும் சாப்பாடு வர தாமதமானதாக தெரிகிறது. இதனால் உறவினர்களும் மெஹ்தாப்பின் நண்பர்களும் கிண்டல் செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையால் கோபமடைந்த மணமகனும் அவரது உறவினர்களும் திருமணத்தை நிறுத்துங்கள் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அதிர்ச்சியூட்டும் விதமாக, மெஹ்தாப் அதே இரவில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் செய்து கொண்ட பெண் மெஹ்தாப்பின் உறவுக்காரப் பெண் என்று கூறப்படுகிறது. 

பின்னர் கைவிடப்பட்ட மணமகளின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு மெஹ்தாப்பின் குடும்பத்தினர் ரூ.1.60 லட்சத்தை வரதட்சணையாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து மணப்பெண் கொடுத்த புகாரில், “டிசம்பர் 22ஆம் தேதி திருமண ஊர்வலம் நடைபெற்றது. மணமகன் மணமகள் வீட்டிற்கு வந்தார்.அப்போது இரவு உணவு பறிமாறப்பட்டது. மெஹ்தாப் உடன் திருமணம் செய்வது என்று 7 மாதங்களுக்கு முன்பு முடிவானது. இரவு உணவு பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பின்னர், எனது பெற்றோரை திட்டிவிட்டு தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர். எனக்கு நீதி வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

டிசம்பர் 25 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை போலீசார் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தனர். சந்திப்பின் போது, ​​மெஹ்தாப்பின் குடும்பத்தினர் வரதட்சணையாகப் பெற்ற ரூ.1.60 லட்சத்தை திருப்பிக் கொடுத்தனர்.

பின்னர் மணமகளின் குடும்பத்தினர் புகாரை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். மெஹ்தாப் அல்லது அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்கினர்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
Embed widget