மேலும் அறிய

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு

மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைபிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

நாளை உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்படும் வேளையில், உத்தர பிரதேச அரசு, பத்தாண்டுக்கான (2021- 30 ) மக்கட்தொகைக் கொள்கையை  வெளியிட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டியது.

இந்தியாவின் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உ.பி திகழ்கிறது. 1900- 50 ஆகிய காலகட்டங்களில் இதன் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் வெறும் 30% ஆக இருந்த நிலையில், சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில்( 1950- 2011) இதன் வளர்ச்சி விகிதம் சுமார் 216% அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.     

தரவரிசையில் முதலிடம்; மருத்துவர் கனவுகளுடன் முதல்வரின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவர்..!   

91ல் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 8 கோடியாக இருந்த மக்கட்தொகை, 2011ல் 16 கோடியாக அதிகரித்தது. 2011ல் மக்கள் தொகை 19 கோடியைத் தாண்டியது. அதாவது, கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்தது. அதற்கு, முந்தைய பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 25% ஆக அதிகரித்தது. இதே கால கட்டத்தில், தேசிய அளவிலான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.      

முன்னதாக, மக்கட்தொகைக் கொள்கை புதுப்பிப்பது  குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "கல்வியறிவின்மை, வறுமை, சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் குறைவாக இருப்பது ஆகியவை மக்கட்தொகை பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சில சமூகங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்  குறித்த விழிப்புணர்வு இல்லை. சமூக அளவிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் புதிய கொள்கையின் நோக்கமாகும்" என்று தெரிவித்தார். 


இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு

இதற்கிடையே, இரு குழந்தை பெற்றெடுப்பு கொள்கையை மீறும் பெற்றோர்கள் அரசாங்கத் திட்டங்களின் பயன்கள் மற்றும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிகளை இழக்கும் விதமாக மக்கட்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்ட  வரைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைப்பிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

இருப்பினும், குடும்பக் கட்டுப்பாடு கொள்கையின் ஒரு அங்கமாக, பெற்றோர்கள் எத்தனைக் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயிப்பது தவறான முன்னுதாரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய சுகாதார அமைச்சகமும் குழந்தைகளை பெற்றெடுக்க இலக்கு நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.    

தன்னார்வத்தோடும் தகவல்களைத் தெரிந்துகொண்டு மக்கள் தங்கள் இசைவுடன் மகப்பேறு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் 2020 தேசிய மக்கட்தொகைக் கொள்கையும்  வலியுறுத்துகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget