மேலும் அறிய

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு

மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைபிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

நாளை உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்படும் வேளையில், உத்தர பிரதேச அரசு, பத்தாண்டுக்கான (2021- 30 ) மக்கட்தொகைக் கொள்கையை  வெளியிட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டியது.

இந்தியாவின் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உ.பி திகழ்கிறது. 1900- 50 ஆகிய காலகட்டங்களில் இதன் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் வெறும் 30% ஆக இருந்த நிலையில், சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில்( 1950- 2011) இதன் வளர்ச்சி விகிதம் சுமார் 216% அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.     

தரவரிசையில் முதலிடம்; மருத்துவர் கனவுகளுடன் முதல்வரின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவர்..!   

91ல் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 8 கோடியாக இருந்த மக்கட்தொகை, 2011ல் 16 கோடியாக அதிகரித்தது. 2011ல் மக்கள் தொகை 19 கோடியைத் தாண்டியது. அதாவது, கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்தது. அதற்கு, முந்தைய பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 25% ஆக அதிகரித்தது. இதே கால கட்டத்தில், தேசிய அளவிலான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.      

முன்னதாக, மக்கட்தொகைக் கொள்கை புதுப்பிப்பது  குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "கல்வியறிவின்மை, வறுமை, சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் குறைவாக இருப்பது ஆகியவை மக்கட்தொகை பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சில சமூகங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்  குறித்த விழிப்புணர்வு இல்லை. சமூக அளவிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் புதிய கொள்கையின் நோக்கமாகும்" என்று தெரிவித்தார். 


இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு

இதற்கிடையே, இரு குழந்தை பெற்றெடுப்பு கொள்கையை மீறும் பெற்றோர்கள் அரசாங்கத் திட்டங்களின் பயன்கள் மற்றும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிகளை இழக்கும் விதமாக மக்கட்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்ட  வரைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைப்பிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

இருப்பினும், குடும்பக் கட்டுப்பாடு கொள்கையின் ஒரு அங்கமாக, பெற்றோர்கள் எத்தனைக் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயிப்பது தவறான முன்னுதாரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய சுகாதார அமைச்சகமும் குழந்தைகளை பெற்றெடுக்க இலக்கு நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.    

தன்னார்வத்தோடும் தகவல்களைத் தெரிந்துகொண்டு மக்கள் தங்கள் இசைவுடன் மகப்பேறு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் 2020 தேசிய மக்கட்தொகைக் கொள்கையும்  வலியுறுத்துகிறது.  

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget