மேலும் அறிய

‘மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதிப்பது’ - பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்றுள்ளார். 

ராயல் ஓவர்-சீஸ் லீக் கிளப் சார்பாக லண்டனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்தியர்கள், உலகை எப்படி பார்க்கிறார்கள்' என தலைப்பில் பேசினார்.

"மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல"

அப்போது, மதச்சார்பின்மை குறித்து பேசிய அவர், "இந்தியாவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல. ஆனால், அனைத்து மதங்களையும் சமமான அளவில் மதிப்பதே ஆகும். கடந்த கால அரசாங்கத்தின் சமரச கொள்கைகள், நாட்டின் பெரும்பான்மை மதத்தை குறைத்து மதிப்பிட்டது. சமத்துவம் என்ற பெயரில், கடந்தகால அரசு அப்படி செய்தது" என்றார்.

பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், நேரு காலத்திலிருந்து பிற்பற்றப்பட்டு வந்த கொள்கையில் இருந்து விடுப்பட்டு குறுகிய மனப்பான்மை கொண்ட இந்து பெரும்பான்மை நாடாக மாறியிருக்கிறதா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "இந்தியா நிச்சயமாக மாறிவிட்டது. 

ஆனால், அந்த மாற்றம் என்பது குறுகிய மனப்பான்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல. நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதில் உறுதியாக மாறிவிட்டது. நேருவின் காலத்தில் இருந்து இந்தியா மாறிவிட்டதா என கேட்டால் அதற்கு ஆமாம் என்பதுதான் பதில். ஏனென்றால், அந்த சகாப்தத்தின் அனுமானங்களில் ஒன்று, நமது அரசியலை தீர்மானிக்கக்கூடிய சிந்தனையாக இருந்தது.

"சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியல்"

மதச்சார்பின்மையை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான் அந்த அனுமானம். எங்களைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது என்று அர்த்தமல்ல. எங்களைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாத மதிப்பதே ஆகும்.

தற்போது அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்றால், அனைத்து மதங்களையும் மதிக்க தொடங்கியுள்ளோம். முன்பு, சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியலில் இறங்கினோம். அது, ஒரு காலக்கட்டத்தில், ஒரு பின்னடைவை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.

சமரச அரசியல் என்பது இந்திய அரசியல் விவாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த வார்த்தையாகும். எந்த திசையில் அரசியல் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தது. அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்ற பெயரில், உண்மையில், பெரும்பான்மையினரின் மதம் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அதிகமான மக்கள் உணரத் தொடங்கினர். அந்த சமூகத்தின் பெரும் பகுதியினர் இது நியாயமானதாக இல்லை என்று கருதினர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் காணப்பட்ட அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இந்த நியாயமற்ற உணர்வுக்கு அறிவுசார் மற்றும் அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட எதிர்வினையே காரணம்" என்றார்.                                                                             

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget