மேலும் அறிய

‘மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதிப்பது’ - பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்றுள்ளார். 

ராயல் ஓவர்-சீஸ் லீக் கிளப் சார்பாக லண்டனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்தியர்கள், உலகை எப்படி பார்க்கிறார்கள்' என தலைப்பில் பேசினார்.

"மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல"

அப்போது, மதச்சார்பின்மை குறித்து பேசிய அவர், "இந்தியாவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல. ஆனால், அனைத்து மதங்களையும் சமமான அளவில் மதிப்பதே ஆகும். கடந்த கால அரசாங்கத்தின் சமரச கொள்கைகள், நாட்டின் பெரும்பான்மை மதத்தை குறைத்து மதிப்பிட்டது. சமத்துவம் என்ற பெயரில், கடந்தகால அரசு அப்படி செய்தது" என்றார்.

பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், நேரு காலத்திலிருந்து பிற்பற்றப்பட்டு வந்த கொள்கையில் இருந்து விடுப்பட்டு குறுகிய மனப்பான்மை கொண்ட இந்து பெரும்பான்மை நாடாக மாறியிருக்கிறதா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "இந்தியா நிச்சயமாக மாறிவிட்டது. 

ஆனால், அந்த மாற்றம் என்பது குறுகிய மனப்பான்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல. நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதில் உறுதியாக மாறிவிட்டது. நேருவின் காலத்தில் இருந்து இந்தியா மாறிவிட்டதா என கேட்டால் அதற்கு ஆமாம் என்பதுதான் பதில். ஏனென்றால், அந்த சகாப்தத்தின் அனுமானங்களில் ஒன்று, நமது அரசியலை தீர்மானிக்கக்கூடிய சிந்தனையாக இருந்தது.

"சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியல்"

மதச்சார்பின்மையை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான் அந்த அனுமானம். எங்களைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது என்று அர்த்தமல்ல. எங்களைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாத மதிப்பதே ஆகும்.

தற்போது அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்றால், அனைத்து மதங்களையும் மதிக்க தொடங்கியுள்ளோம். முன்பு, சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியலில் இறங்கினோம். அது, ஒரு காலக்கட்டத்தில், ஒரு பின்னடைவை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.

சமரச அரசியல் என்பது இந்திய அரசியல் விவாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த வார்த்தையாகும். எந்த திசையில் அரசியல் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தது. அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்ற பெயரில், உண்மையில், பெரும்பான்மையினரின் மதம் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அதிகமான மக்கள் உணரத் தொடங்கினர். அந்த சமூகத்தின் பெரும் பகுதியினர் இது நியாயமானதாக இல்லை என்று கருதினர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் காணப்பட்ட அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இந்த நியாயமற்ற உணர்வுக்கு அறிவுசார் மற்றும் அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட எதிர்வினையே காரணம்" என்றார்.                                                                             

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Embed widget