மேலும் அறிய

Uddhav Thackeray: "உத்தவ் தாக்கரே என்னைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவினார்" - மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோது தன்னைக் கொலை செய்ய பலமுறை கூலிப்படைகளை ஏவியதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணன் ரானே.

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோது தன்னைக் கொலை செய்ய பலமுறை கூலிப்படைகளை ஏவியதாக கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணன் ரானே. இவர் முன்னாள் சிவசைனிக் என்பது கூடுதல் தகவல்.

கொலை முயற்சி:

மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் ரானே, உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது என்னைக் கொலை செய்ய அவ்வப்போது கூலிப்படைகளை நாடுவார். அவர்கள் எனக்கே போன் செய்து உங்களை கொலை செய்யச் சொல்லி அசைன்மன்ட் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று எச்சரிப்பார்கள். அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் ஏவிய யாராலும் என்னை நெருங்கக் கூட முடியவில்லை என்பதுதான்.

2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது கொரோனா மருந்து கொள்முதலில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்.  இப்படிப்பட்டவர் எங்கள் கட்சிப் பிரமுகரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்நவிஸை தகுதியற்றவர் என்று விமர்சிப்பது தகுமோ? என்று வினவினார்.

யார் இந்த நாராயண ரானே..!

இன்று உத்தவ் தாக்கரேவை வந்துபார் என்று விமர்சிக்கும் ரானேவை மிகப்பெரிய ஆளாக வளர்த்ததே சிவசேனா கட்சி தான். அவரது அரசியல் அடித்தளம் அங்குதான் அமைந்தது. கவுன்சிலர் பதவியில் இருந்து மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவி வரை இவரை அமர வைத்து அழகு பார்த்தது சிவசேனா. 20 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் தொடங்கினார் நாராயண ரானே. அப்போது பால் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்தார். 1990-ல் சிவசேனா எம்.எல்.ஏவாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1998-ல் மனோகர் ஜோஷி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து பால்தாக்கரேவால் நாராயண் ரானே மகாராஷ்ட்ரா முதல்வராக நியமிக்கப்பட்டார். சுமார் 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார். 

நாராயண்ரானே - உத்தவ் தாக்கரே:

ஆனால் நாராயண் ரானே முதல்வர் ஆக்கப்பட்டதில் உத்தவ் தாக்கரேவுக்கு அப்போது உடன்பாடில்லை என சிவசேனா வரலாற்றுப் பக்கங்கள் கூறுகிறது. அப்போது இருந்தே இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.  இப்படியே மோதலுடனேயே சிவசேனாவில் காலம் தள்ளிய நாராயண ரானே, 2005-ல் சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி நாராயண் ரானேவுக்கு அமைச்சர் பதவி வழங்கியது. சில காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

ஆனால் அவர் இலக்கெல்லாம் முதல்வர் பதவியாகவே இருந்தது. காங்கிரஸில் அது அவருக்கு சாத்தியப்படவில்லை. எனவே தனக்கு முதல்வர் பதவி வழங்கவில்லை எனக் கூறி சோனியா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசத் தொடங்கினர். இதன்காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்ததும் வேறு கதை. ஆனால் அதன் பின்னர் காங்கிரஸ் டிக்கெட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை. பின்னர் பாஜகவில் இணைந்த அவர் இப்போது மத்திய அமைச்சராக உலா வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget