மேலும் அறிய

5 Crore Cases : இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகள்: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரும் மழைக்காலக் கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

இந்த நிலையில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

"டிசம்பர் 1ஆம் தேதி வரை, 5 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 856 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மாவட்டம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாடு முழுவதும் இந்திய நீதித்துறையில் 26,568 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில்  1,114 நீதிபதிகள் வரை வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என மத்திய சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசு தகவல்:

கடந்தாண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி 71,411 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அதில் 56,000 சிவில் வழக்குகள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் அடங்கும்.

கடந்தாண்டு நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 71,411 வழக்குகளில் 10,491 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 42,000 வழக்குகள் ஐந்து ஆண்டுகளாகவும் 18,134 வழக்குகள் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்திலும் நிலுவையில் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ​​கடந்தாண்டு ஜூலை 29 ஆம் தேதி வரை அவற்றின் எண்ணிக்கை 59,55,907 ஆக உயர்ந்தது.                                                                                                                                                                                        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget