சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
NTK seeman: நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு.

நேற்று கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக புகார் எழுந்தது. தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று தெரிவித்தை தொடர்ந்து பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், சீமான் வீட்டுக்கு சென்று ஆதாரத்தை கேட்கப்போவதாக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பெரியார் பற்றி கோஷமிட்டபடியே சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியார் திராவிட கழகத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவ்வழியாக சீமான் வீட்டிற்கு சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார் மீது தந்தை பெரியார் திராவிட கழக இயக்கத்தை சார்ந்தவர்கள் கல் வீசியதால் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பெரியார் குறித்த தனது கருத்தை சீமான் திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என த.பெ.தி.க.வினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















