மேலும் அறிய

"அரசுப் பணிகளில் இந்தியை முதன்மை மொழியாக்க நடவடிக்கை" மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தி தினம் குறித்த தமது செய்தியில், "கடந்த 1949ஆம் ஆண்டு இதேநாளில் , இந்திய அரசியல் நிர்ணய  சபை இந்தியை நாட்டின் அலுவல்  மொழியாக ஏற்றுக்கொண்டது.

"ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது"

75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  இந்த ஆண்டு நாம் ஆட்சி மொழியின் வைர விழாவைக் கொண்டாட உள்ளோம். இந்த 75 ஆண்டுகாலப் பயணம்,  இந்தி மற்றும் அனைத்து மாநிலங்களின் அந்தந்த மொழிகளுக்கும் மிகவும் முக்கியமானது.

இந்தி பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால், இன்று இந்தக் கட்டத்தில் நிற்கும்போது, இந்தி எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூற முடியும்" என்றார்.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி  என்றும், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும், இந்தி ஒவ்வொரு மொழியையும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தி இயக்கத்தை நாம் கவனமாகப் பார்த்தால், அது ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது ஆச்சார்யா கிருபளானி என அனைவருமே இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

அமித் ஷா கூறியது என்ன?

ஐயங்கார் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தியை அலுவல்  மொழியாக அங்கீகரிப்பதற்கும், இந்தி மற்றும் நமது பிற அனைத்து மொழிகளுக்கும் வலு சேர்ப்பதற்கும் அரசியல் நிர்ணய சபையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது என்று அவர் கூறினார். இந்த இரு தலைவர்களும் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் பெருமையுடன் பல சர்வதேச மன்றங்களில் இந்தியில் உரையாற்றியுள்ளார்.

நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியின் முக்கியத்துவத்தை முன்வைத்துள்ளார். இதனுடன், பிரதமர் மோடி நாட்டிற்குள் நமது மொழிகளின் மீதான பெருமை உணர்வையும் அதிகரித்துள்ளார். இந்த 10 ஆண்டுகளில், பல இந்திய மொழிகளை வலுப்படுத்த நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கு முக்கிய இடம் அளித்ததன் மூலம் நமது அனைத்து மொழிகளுக்கும் இந்திக்கும் புதுவாழ்வு அளித்துள்ளார் பிரதமர் மோடி என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் நான்கு அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். மேலும், அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இந்திய மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அரசியல் நிர்ணய சபையின் உணர்வு என்று அவர் கூறினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget