மேலும் அறிய

"அரசுப் பணிகளில் இந்தியை முதன்மை மொழியாக்க நடவடிக்கை" மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தி தினம் குறித்த தமது செய்தியில், "கடந்த 1949ஆம் ஆண்டு இதேநாளில் , இந்திய அரசியல் நிர்ணய  சபை இந்தியை நாட்டின் அலுவல்  மொழியாக ஏற்றுக்கொண்டது.

"ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது"

75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  இந்த ஆண்டு நாம் ஆட்சி மொழியின் வைர விழாவைக் கொண்டாட உள்ளோம். இந்த 75 ஆண்டுகாலப் பயணம்,  இந்தி மற்றும் அனைத்து மாநிலங்களின் அந்தந்த மொழிகளுக்கும் மிகவும் முக்கியமானது.

இந்தி பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால், இன்று இந்தக் கட்டத்தில் நிற்கும்போது, இந்தி எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூற முடியும்" என்றார்.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி  என்றும், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும், இந்தி ஒவ்வொரு மொழியையும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தி இயக்கத்தை நாம் கவனமாகப் பார்த்தால், அது ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது ஆச்சார்யா கிருபளானி என அனைவருமே இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

அமித் ஷா கூறியது என்ன?

ஐயங்கார் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தியை அலுவல்  மொழியாக அங்கீகரிப்பதற்கும், இந்தி மற்றும் நமது பிற அனைத்து மொழிகளுக்கும் வலு சேர்ப்பதற்கும் அரசியல் நிர்ணய சபையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது என்று அவர் கூறினார். இந்த இரு தலைவர்களும் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் பெருமையுடன் பல சர்வதேச மன்றங்களில் இந்தியில் உரையாற்றியுள்ளார்.

நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியின் முக்கியத்துவத்தை முன்வைத்துள்ளார். இதனுடன், பிரதமர் மோடி நாட்டிற்குள் நமது மொழிகளின் மீதான பெருமை உணர்வையும் அதிகரித்துள்ளார். இந்த 10 ஆண்டுகளில், பல இந்திய மொழிகளை வலுப்படுத்த நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கு முக்கிய இடம் அளித்ததன் மூலம் நமது அனைத்து மொழிகளுக்கும் இந்திக்கும் புதுவாழ்வு அளித்துள்ளார் பிரதமர் மோடி என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் நான்கு அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். மேலும், அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இந்திய மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அரசியல் நிர்ணய சபையின் உணர்வு என்று அவர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Embed widget