மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Headlines Today : காஞ்சிபுரத்தில் பயங்கர தீ விபத்து... மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. இன்னும் பல முக்கியச் செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
![Headlines Today : காஞ்சிபுரத்தில் பயங்கர தீ விபத்து... மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. இன்னும் பல முக்கியச் செய்திகள்.. today news headlines in tamilnadu india september 29 top news today morning headlines news in tamil Headlines Today : காஞ்சிபுரத்தில் பயங்கர தீ விபத்து... மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. இன்னும் பல முக்கியச் செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/8c245de6b72d20bd201d24dcb861f1d11664413111379571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
- கேஸ் சிலிண்டர் குடோனில் பயங்கர தீ விபத்து - 12-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
- நீதிமன்றம் சென்று பொதுமக்கள் அலைவதை தடுக்கும் வகையில் பதிவுத்துறைக்கு போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- அறநிலைத்துறை சார்பில் முதல்முறையாக திருச்செந்தூர் முருகன் கோயிலை ரூ.300 கோடியில் மேம்படுத்தும் பணி தொடக்கம்
- காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி
- மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
- தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
- தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன் பதிவு செய்துவிட்டு 73.99 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்
- புதுச்சேரி அருகே ஆற்று மணல் கடத்தல்: திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் கைது
- தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட PFI அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு NIA காவல்
இந்தியா:
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு : 1.16 கோடி பேர் பயனடைவார்கள்
- பல்வேறு புகார்களை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை : மத்திய அரசு அதிரடி
- இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்
- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மாட்டார் என்று அந்த மாநில அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
- இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம்:
- நேபாளம் சிகரத்தில் மாயமாகிய அமெரிக்க மலையேற்ற வீராங்கனை ஹிலாரி நெல்சன் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
- ஈரான் குர்கிஸ்தான் பகுதியில் புரட்சிப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி
- தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சிமானிலே என்ற பெண் ஒரு நிமிடத்தில் 120 கோழிக்கால்களை சாப்பிடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
- டி20 போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2ம் இடத்திற்கு முன்னேறினார்.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion