Breaking News Live: குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்த மூதாட்டிக்கு அவமதிப்பு.. கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News Live Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..!
LIVE
Background
Breaking News Live Tamil:
நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பிரிவினர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவினர் மீது நாகாலாந்து போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, "பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சென்றதாக ராணுவ பிரிவு சார்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்காமல், ராணுவத்தின் சிறப்பு படை சென்றுள்ளது. இதில் இருந்தே கொலை செய்ய வேண்டும், காயமேற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளது உறுதியாகிறது. எதிர்தரப்புக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்த மூதாட்டிக்கு அவமதிப்பு.. கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..
மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் - நீதிமன்றம்
பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லியில் பாஜக எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். தாம்ப்ரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிடுகிறார்.