மேலும் அறிய
Today Headlines : இரவு ஊரடங்கு..அதிகரிக்கும் கொரோனா..ஆளுநர் உரை..தோல்வியை தவிர்க்குமா இந்தியா...இன்றைய முக்கியச் செய்திகள்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
-
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - அமைச்சர் மா.சுப்ரமணியன்
- தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
- கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழ்நாடுஅரசு
- நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை - ஆளுநர் ஆர்.என்.ரவி
- ஆவினில் வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது
- அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக்கல்லூரிகள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை
இந்தியா:
- புல்லி பாய் செயலியில் பெண்களை ஏலம் விட்டதற்காக 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயது மாணவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
- பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப்பில் பிரதமர் மோடி பிரச்சாரம் ரத்து
- தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும் - டி.ஆர். பாலு
- பாரத் பயோடெக்கின் மூக்குவழி பூஸ்டர் இறுதி கட்ட சோதனைக்கு அனுமதி
- மூன்று நாட்களில் 15 -18 வயதுக்குட்பட்ட 1 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.
உலகம்:
- தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல் உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியது சர்ச்சையானது.
- அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் 28 நாட்கள் கோமாவில் இருந்ததற்கு பிறகு, மருத்துவர்கள் கொடுத்த ‘வயாகரா’ மருந்தால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
விளையாட்டு:
- இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அந்த அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ரன் விவரம்: 118/2
- கடந்த 10 ஆண்டுகளில், நியூசிலாந்து மண்ணில் நியூசி அணியை வீழ்த்தி இருக்கும் முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது வங்கதேச அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















