மேலும் அறிய
Weather Update: வெயிலுக்கு ரெஸ்ட்.. வங்கக்கடலில் உருவாகிறது புயல்.. வானிலை மையத்தின் எச்சரிக்கை இதுதான்!
வங்ககடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்ககடலில் புயல்
மே 10ஆம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் எனவும் மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அசானி என அந்தப் புயலுக்கு பெயர் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















