![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking LIVE: கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
![Breaking LIVE: கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின் Breaking LIVE: கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/0ccf59113d2d4c99263d95390547493c1672107742273571_original.jpg)
Background
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 220ஆவது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (டிச.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டு மக்கள் கையை மாற்றுவது நல்லது - ஜே.பி. நட்டா
நாட்டை இணைக்க நாங்கள் (பாஜக) இருக்கிறோம். நாட்டை பிளக்க அவர்கள் (திமுக) இருக்கிறார்கள். எனது கவலை என்னவென்றால் நாடு பாதுகாப்பான கையில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை. ஆகையால், கையை மாற்றுவது நல்லது என, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு 25 எம்.பிக்கள்..! - அண்ணாமலை
2014 மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து, நாடாளுமன்றத்திற்கு பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. ஆனால், இந்த முறை பாஜகவை சேர்ந்த 25-க்கும் அதிகமான எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என, கோவையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு..!
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
மைசூரு- பிரதமரின் சகோதரர் சென்ற கார் விபத்து
பிரதமாரின் சகோதரர் பிரகலாத் மோடி உட்பட 6 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. மைசூருக்கு சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி பிரகலாத் மோடி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)