மேலும் அறிய

மேற்கு வங்கம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அம்மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நிறைவு பெற்ற பிறகு, இந்த 5 மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து தினசரி உயர்நது கொண்டே செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் முதன்முறையாக வட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ கடந்து விற்கப்பட்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலே அதிகபட்சமாக மும்பையில் லிட்டர் ரூபாய் 105க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் லிட்டர் ரூபாய் 101க்கு பெட்ரோல் விற்பனையாகிறது.



மேற்கு வங்கம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.01க்கு விற்கப்படுகிறது. டீசல் 92.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக, மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அந்த மாநில ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காள அமைச்சர் பெச்சாராம் மன்னா பெட்ரோல் விலையை கண்டித்து சிங்கூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சைக்கிள் மூலமாக 40 கிலோ மீட்டர் பயணித்து கொல்கத்தாவில் உள்ள மாநில சட்டசபைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள டம்டம், மத்திய அவென்யூ, செட்லா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. பர்கனாஸ், ஹூக்ளியில் உள்ள சின்சுரா, மால்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிர்கத் ஹகீம் கூறும்போது, கொரோனாவால் கடுமையாக மக்கள் பாதிக்கப்ப்டடுள்ள சூழலில், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது அதிகளவு வரிகளை விதித்துள்ளது.


மேற்கு வங்கம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோ தயாரிப்பு பொருட்களின் விலை கட்டுப்பாடில்லாமல் உள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையை உயர்த்த அனுமதி அளித்துள்ளதால் அவர்களின் லாபங்களும் உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்க வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, அந்த மாநில பா,ஜ.க. தலைவர் திலீப்கோஷ் கூறும்போது, பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது என்றார்.

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget