மேலும் அறிய

E-cigarette Culture: இ- சிகரெட்டால் இவ்வளவு பிரச்சினையா..? தடை இருந்தும் உலவும் ஆபத்துகள்.. வெளியான ஆய்வு முடிவுகள்!

இ-சிகரெட் பயன்பாடு குறித்து ’திங்க் சேஞ்ச் ஃபோரம்’ நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் இ-சிகரெட் எனப்படும் சாதனம் மூலம் புகைபிடிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இ-சிகரெட் போன்ற புகை பிடிப்பு சாதனங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடை சட்டம் 2019 முதல் இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால், இ-சிகரெட்டிற்கு தடை இருப்பது பெரும்பாலான இளம் மாணவர்களுக்கு தெரியவில்லை என்று நாடு தழுவிய ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது.


மாணவர்களின் புதிய பழக்கம் புகைப்பிடிப்பது:

Vaping e-liquid from an electronic cigarette Vaping flavored e-liquid from an electronic cigarette vaping ban stock pictures, royalty-free photos & images

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் புகை பழக்கத்திற்கு அடிமை ஆகவே இருக்கின்றனர். சமீப காலமாக இ-சிகரெட் எனப்படும் புகையிலை பயன்படுத்தப்படாமல் அதற்குப் பதிலாக பேட்டரி மூலம் புகையை வெளியேற்றும் சாதனம் தான் இ-சிகரெட். இது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இ-சிகரெட்டில் குறைந்த அளவு நிக்கோட்டின்தான் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இதில் அதிக அளவில் சுவையூட்டிகள், நுண் துகள்கள், நுரையீரல் நோயை உண்டாக்கும் ரசாயனங்கள் என பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இதில் உள்ளது. சாதாரண சிகரெட்டுகளை விடவும் பார்ப்பதற்குக் கவர்ச்சியான வடிவங்களில் வருவதாலும் இந்தியச் சந்தையில் மிக எளிதாகக் கிடைக்க கூடியதாகவும் இருப்பதால் இந்திய இளைஞர்கள் இதை விரும்பி புகைக்கின்றனர்.

இந்தியா தழுவிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் :

A social worker meeting with a group of villagers Ghaziabad, Uttar Pradesh, India- December 23, 2013: Two female social workers are interacting with a group of villagers comprising of children and female adults. They are working for the development of the village and uplifting the standard of living in the village. survey stock pictures, royalty-free photos & images

’திங்க் சேஞ்ச் ஃபோரம்’ என்ற குழு ’போதையற்ற இந்தியாவுக்கான சிந்தனைகள்’ என்ற தலைப்பின் கீழ் டெல்லி, நொய்டா, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் 96 சதவீதம் பேருக்கு இ-சிகரெட் தடை குறித்துத் தெரியவில்லை, 89 சதவீதம் பேருக்கு இ-சிகரெட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து தெரியவில்லை. அதிலும், குறிப்பாக 52 சதவீதம் பேருக்கு இ-சிகரெட் புகை பிடிப்பதின் புதிய வெர்சன் என்றும், இதில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கருதுகின்றனர். அதேபோல் 37 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இதைத் தீங்கு விளைவிப்பதாகக் கருதுகின்றனர். மேலும் 11 சதவீதம் என்ற குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே இதை முற்றிலும் தீங்கு விளைவிப்பதாகக் கருதுகின்றனர். இப்படியான வியக்கத்தக்கத் தகவல் ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.


இ-சிகரெட் குறித்த விழிப்புணர்வு வேண்டும்:

 

Young man vaping e-cigarette at home Young man vaping e-cigarette at home E cigarette stock pictures, royalty-free photos & images

இந்த ஆய்விலிருந்து நாம் அறியக் கூடியவை என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் நிறைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இ-சிகரெட்டியின் தீங்கு குறித்தும் இந்தியாவில் அதன் மீது உள்ள தடை குறித்தும் அறியாமையில் உள்ளனர். குறிப்பாக, 14 முதல் 17 வயதில் உள்ள மாணவர்களுக்கு இதனை பற்றிய முழு தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். இது மாணவர்கள் மத்தியில் இ-சிகரெட் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மூலம் நமக்குத் தெரியவருகிறது. மாணவர்களிடையே. இதுகுறித்தான விழிப்புணர்வை முதலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரிதளவில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு இ-சிகரெட் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதில் உள்ள தீங்குகளை முறையாகக் கற்பித்து போதை இல்லாத இந்தியா உருவாக்கத் துணை நிற்க வேண்டும்.

 

 

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget