மேலும் அறிய

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக என கடுகடுக்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல லாஸ்பேட்டையில் குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த இடங்களில் பா.ஜக.வினர் தங்கள் பேனர்களை வைத்ததுடன், கட்சிக் கொடிகளையும் பறக்க விட்டனர். அதுமட்டுமல்லாமல் அந்த முகாம்களை பா.ஜ.கவின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செல்லப்பெருமாள்பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பா.ஜ.கவினர் அவர்களது கட்சி கொடிகளை கட்டி பேனர்களையும் வைத்திருந்தனர். அப்போது, 'இது அரசு நடத்தும் தடுப்பூசி முகாம். இங்கு ஏன் உங்கள் கட்சிக் கொடிகளை வைக்கிறீர்கள்?’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர் பணியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள். அதனால் சுகாதாரத்துறை ஊழியர்களிடமும், பணியில் இருந்த மருத்துவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பா.ஜ.க நிர்வாகிகள்.


புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

தகவலறிந்து தனது ஆதரவாளர்களுடன் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்றார் லாஸ்பேட்டை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன். அதையடுத்து அங்கிருந்த பா.ஜ.க நிர்வாகிகள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. தொடர்ந்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ வைத்தியநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஏற்கெனவே குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை பா.ஜ.கவினர் நடத்துவது போல கட்சிக்கொடி, பேனர்களை வைத்திருந்தனர்.


புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு கட்சியின் தலைவர் முகாமை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கும் ஆறு தொகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களை காங்கிரஸ் மற்றும் தி.மு.கவினர் முகாம்களை தொடங்கி வைக்கலாமா? அரசு விழாவை தாங்கள் நடத்தும் விழாபோல காட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர்.


புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

இது தொடர்பாக சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரை தெரிவிக்க இருக்கிறேன்” என்றார். மேலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர் ABP நாடுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் கூறியது, ”புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கத்தை கடந்த ஆட்சியில் கட்டுக்குள் வைத்து போர்க்கால அடிப்படையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை மேற்கொண்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார், ஆனால் தற்பொழுது உள்ள என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியானது பதவிக்காக பேரம் பேசிக்கொண்டு  நாற்காலி சண்டைபோட்டு வருகின்றனர். இவர்களின் நாற்காலி சண்டை கிடையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாக இருப்பதாகவும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,  புதுச்சேரியில் தற்போது தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது இதில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் அவர்கள் அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுவது அநாகரிகமான அரசியலாகும்” என கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Petrol Diesel Price Hike : அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
Green Card: க்ரீன் கார்ட் வேண்டுமா? மொதல்ல சொந்த ஊருக்கு கிளம்புங்க - புது ரூல்ஸ் போட்ட அமெரிக்கா
Green Card: க்ரீன் கார்ட் வேண்டுமா? மொதல்ல சொந்த ஊருக்கு கிளம்புங்க - புது ரூல்ஸ் போட்ட அமெரிக்கா
தொடரும் போர்; மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
தொடரும் போர்; மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
Embed widget