மேலும் அறிய

ஜம்முவில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்.. 500 கமாண்டோக்களை களம் இறக்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளை கொல்ல பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை களத்தில் இறக்கியுள்ளது இந்திய ராணுவம்.

ஜம்முவில் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15ஆம் தேதி இரவு, ஜம்மு தோடா பகுதியில் நடந்த என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ கேப்டன், காஷ்மீர் காவல்துறை அதிகாரி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்: அதற்கு முன்பு, கடந்த 8ஆம் தேதி, கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஜம்முவில் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நோக்கில் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை களத்தில் இறக்கியுள்ளது இந்திய ராணுவம்.

ஜம்முவில் பயங்கரவாதத்தை மீட்டெடுக்க பாகிஸ்தானிலிருந்து 50 முதல் 55 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களை தேடி கண்டுபிடித்து கொல்ல சிறப்பு கமாண்டோக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "மறைந்திருந்து பயங்கரவாதிகளுக்கு உதவும் அங்குள்ள பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடி காட்டும் இந்திய ராணுவம்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை எதிர்கொள்ள ராணுவம் ஏற்கனவே 3,500-4000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவு உட்பட துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் உத்திகளை களத்தில் உள்ள ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்" என்றார்.

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

 

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget