மேலும் அறிய

காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா? பள்ளியில் கும்பல் அட்டூழியம்.. தெலங்கானாவில் பதற்றம்!

தெலங்கானாவில் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, கும்பல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுப்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் கல்வி நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. 

காவி உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பா?

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஒன்றின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி பள்ளி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்களிடம் பள்ளி முதல்வர், சீருடை தொடர்பாக விசாரித்துள்ளார். இதையடுத்து, பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ளது கண்ணேப்பள்ளி கிராமம். மாஞ்சேரில் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியின் முதல்வர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜெய்மோன் ஜோசப்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, பள்ளிக்கு சில மாணவர்கள் காவி உடை அணிந்து வந்துள்ளனர். இதை கவனித்த பள்ளி முதல்வர் ஜோசப், மாணவர்களிடம் அதுகுறித்து விசாரித்துள்ளார். 21 நாள் அனுமன் தீட்சைக்கு விரதம் இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி பேசுவதற்கு, பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு மாணவர்களிடம் முதல்வர் கூறினார்.

தெலங்கானாவில் பள்ளி மீது தாக்குதல்:

அன்னை தெரசா பள்ளியில் இந்து உடையை அணிய அனுமதிக்கவில்லை என்று கூறி, சமூக ஊடகங்களில் சிலர் வீடியோவைப் பகிர்ந்தனர். இந்த வீடியோ பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வீடியோ பகிரப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பள்ளியை ஒரு கும்பல் தாக்கியது.

காவி உடை அணிந்த சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பி பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இம்மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டும் என கூப்பிய கைகளுடன் ஆசிரியர்கள் அவர்களை வேண்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.

நிலைமையை கட்டுக்குள் கொண்ட வர காவல்துறை அதிகாரிகள் முயற்சிப்பதும், போராட்டக்காரர்களை பள்ளி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதையும் வீடியோவில் காணலாம். வளாகத்தில் உள்ள அன்னை தெரசா சிலை மீது கும்பல் கற்களை வீசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

கும்பலை சேர்ந்த சிலர் முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து, அவரை அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பான பிரிவுகளின் கீழ், முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget