மேலும் அறிய

Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து

பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிதிஷ் குமாரை வாழ்த்தியுள்ள தேஜஸ்வி யாதவ், புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதிய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவதாக கூறியுள்ளார். அவரது பதிவின் முழு விவரங்களை காண்போம்.

தேஜஸ்வி யாதவின் பதிவு என்ன.?

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், “பீகார் முதலமைச்சராக பதவியேற்ற மதிப்பிற்குரிய ஸ்ரீ நிதிஷ் குமார் ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதிய அரசாங்கம் பொறுப்புள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், அதன் வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றும், பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.“ என கூறியுள்ளார்.

பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி, பாஜக- ஜெடியு-வின் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆர்ஜேடி-யின் மகாகட்பந்தன் கூட்டணி, 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதில் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ்

இதனிடையே, பீகாரில் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க, குறைந்தது 10 சதவீத தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில்  மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த எண்ணிக்கை, மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 10 சதவீததிற்கும் அதிகம் ஆகும். அதனால், கடந்த ஆட்சிக் காலத்தை போலாவே, தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். பீகார் தேர்தலில், ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று தேஜஸ்வி யாதவ் எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget