மேலும் அறிய

முதியவர்கள் வாழ பாதுகாப்பற்ற மாநிலமாகும் தமிழ்நாடு?...வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!

கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20221ஆம் ஆண்டு, முதியவர்கள் கொலை செய்யப்படுவது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முதியவர்கள் சம்பந்தப்பட்ட 191 கொலை வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 202 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் பதிவான 1,686 கொலை வழக்குகளில் 11.3% ஆகும். மொத்தமாக, 1,741 பேர் கொல்லப்பட்டனர். முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அங்கு பதிவான 2,142 கொலை வழக்குகளில் 181 மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியோர் சம்பந்தப்பட்ட கொலைகளின் எண்ணிக்கை 2019 முதல் மாநிலத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மொத்த கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பதிவான 1,745 கொலை வழக்குகளில் 173 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021 இல், புள்ளிவிவரங்களின்படி 1,686 கொலை வழக்குகளில் 191 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2021 புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய காலத்தில், முதியோர் கொலைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் முதியோர் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குற்ற அறிக்கை வெளியாகி உள்ளது. ஜூலை 2022 இல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், வயதான தம்பதியினர் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருப்பூரில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதியோர்கள் அதிகம் உள்ள சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய முதியோர் 2021 அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதியோர்களின் சதவீதம் 13.6 ஆகும். இது நாட்டிலேயே இரண்டாவது மிக அதிகம். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 16.5% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

தரவுகளை உன்னிப்பாகப் பகுப்பாய்வு செய்ததில், முதியோர்களைக் கொலை செய்வதில் தமிழகமும் அதிக குற்ற விகிதத்தில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றனவோ அதுவே குற்ற விகிதமாக கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, கேரளாவில் பதிவாகியுள்ள 337 கொலைகளில் 17.2% முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டில் 11.3 சதவீதத்தை விட அதிகம். இருப்பினும், கேரளாவில் குற்ற விகிதம் 0.99 ஆகவும், தமிழ்நாட்டில் 1.83 ஆகவும் பதிவாகியுள்ளது.

முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளின் குற்ற விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு சில யூனியன் பிரதேசங்கள் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் மட்டுமே குற்ற விகிதம் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget