TN Corona LIVE Updates :தமிழகத்தில் ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பகுதிநேர அடிப்படையில் தன்னார்வத்தோடு மருத்துவ சேவைப்பணி செய்ய மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது. நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும், மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் , முதல் டோஸ் பெற்று இரண்டாம் டோஸ் பெறுவதற்கு முன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களும் குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொரோனா தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் புதிய பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றது.
விரைவில் விற்பனைக்கு வரும் கொரோனா ஹோம் டெஸ்ட் கிட்
இந்தியாவின் முதல் கொரோனா ஹோம் டெஸ்ட் கிட் ரூ.250 விலையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று மாநிலத்திலே முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் இன்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர். சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திலே முதன் முறையாக ஒரே நாளில் சுமார் 400 நபர்கள் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 185 பேர் தனியார் மருத்துவமனையிலும், 212 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மொத்த உயிரிழப்பு மாநிலம் முழுவதும் 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.




















