TN Corona LIVE Updates : கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளி எவ்வளவு இருக்கலாம்? - மத்திய அரசு தகவல்
TN Corona Cases LIVE Updates : இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்
LIVE
Background
புதிதாக கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்று 65 சிவில் சொசைட்டி அமைப்புகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் 1,50,000 ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை அடிப்படையாகக்கொண்ட பிராணவாயு விநியோக முறையான ஆக்சிகேர், எஸ்பிஓ2 அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிராணவாயுவை முறைப்படுத்தும் கருவியாகும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் 1,50,000 ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.
குறைவான எஸ்பிஓ2 அளவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளின் போது தானியங்கி முறையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். ஆக்சிகேர் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பிராணவாயு சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களின் சிறந்த செயல்திறனால் பிராண வாயுவின் பயன்பாடு 30-40% குறைகிறது. இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாளை முதல் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை - தமிழக காவல்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நண்பகல் 12 மணி வரை மட்டும் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் தேவையின்றி சிலர் வெளியில் சுற்றுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் அத்தியாவசிய தேதைவகள் இன்றி வெளியில் தேவையில்லாமல் சுற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளி எவ்வளவு இருக்கலாம்? - மத்திய அரசு தகவல்
#IndiaFightsCorona:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 13, 2021
📍The gap between two doses of #Covishield vaccine has been extended from 6-8 weeks to 12-16 weeks based on the recommendation of COVID working group.
➡️There is no change in the interval of #Covaxin doses which remains at 4-6 weeks.#We4Vaccine#StaySafe pic.twitter.com/HJn38wKw8T
ஹண்டே மருத்துவமனையில் கொரோனா பராமரிப்பு மையம்
சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
மாநில வருவாய் நிதியை அதிகரிக்க நடவடிக்கைத் தேவை: பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைமான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுண்சிலோடு கலந்தாலோசித்து. இந்தப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் (Zero rate) என நிர்ணயிக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் .
1. நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வணி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோணா தொற்றால் பாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-aid) அளிக்கப்பட வேண்டும்.
3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்.
மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களை பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டும் - எடப்பாடி
அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்.
இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டார்.