மேலும் அறிய

சென்னை டூ செகந்திராபாத்: ‘அவர்கள் உணவை மட்டுமே சுமந்து செல்வதில்லை’ - ஸ்விக்கி டெலிவரி பாயின் மனிதநேயம்!

சாலையில் நாம் செல்லும்போது 10ல் 4 இருச்சக்கர வாகனம் ஏதேனும் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாகனமாகத் தான் இருக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு என அவர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

சாலையில் நாம் செல்லும்போது 10ல் 4 இருச்சக்கர வாகனம் ஏதேனும் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாகனமாகத் தான் இருக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு என அவர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னால் உள்ள பெட்டியில் உணவுப் பொட்டலங்கள் இருப்பதுபோல் இந்த டெலிவரி பாய்கள் நிறைய பேர் மனதில் அன்புப் பொட்டலங்களை சுமந்து செல்கின்றனர். அப்படி ஒரு நெகிழ்ச்சிக் கதைதான் இது.

இந்தக் கதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சாய்கிரண் கண்ணன். அவருடைய தாய் பெங்களூருவில் வசிக்கிறார். அவருக்குத் தெரிந்த வயதான தம்பதி சென்னையில் வசிகின்றனர். அவர்களின் மகன் தனியாக செகந்தராபாத்தில் வசிக்கிறார். சென்னை, செகந்தராபாத், பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களை இணைத்து நடந்துள்ளது இந்த சம்பவம்.

சாய்கிரணின் போஸ்டில் இருந்து...
நேற்றிரவு என் தாயின் தூரத்து உறவினரான வயதான தம்பதியிடம் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர்கள் என் தாயிடம் செகுந்தரபாத்தில் உள்ள தங்கள் மகனை சில நாட்களாகவே தொடர்பு கொள்ள முடியவில்லை. போனில் கூட பேசுவதில்லை. எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். கூடவே அந்த நபரின் செகுந்தராபாத் இல்ல அட்ரஸையும் கொடுத்துள்ளனர்.

அந்த அட்ரஸைப் பெற்ற எனது அம்மா அந்த அட்ரஸில் கொஞ்சம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் ஐட்டத்தை டெலிவரி செய்யுமாறு ஸ்விக்கியில் ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த ஸ்விகி நபர் கொடுக்கப்பட்ட அட்ரஸ் இருந்த ஏரியாவில் அரை மணி நேரம் சுற்றித்திரிந்துவிட்டு லொகேஷனை அடையாளம் காண முடியாமல் ஆர்டர் கொடுத்த என் அம்மாவுக்கே ஃபோன் செய்துள்ளார். அதனைக் கேட்ட என் தாயார் சரி நீங்களே அந்த பிஸ்கட், ஜூஸை சாப்பிட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். சில நிமிடங்களில் என் அம்மாவுக்கு துல்லியமான அட்ரஸ் கிடைத்துள்ளது. உடனே அந்த ஸ்விக்கி டெலிவரி பாய்க்கே ஃபோன் செய்துள்ளார். அந்த நபர் மிகவும் இனிமையாகப் பேசியுள்ளார். நான் ஒரு டெலிவரியில் உள்ளேன். அதனை முடித்துவிட்டு அங்கு சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அம்மாவும் சரியென்று சொல்லியுள்ளார்.

அந்த நபர் சரியாக அரை மணி நேரத்தில் அந்த அட்ரஸுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு ஆண் வெளியே வர அவரிடம் ஃபோனைக் கொடுத்துள்ளார். மறுமுனையில் அந்த ஃபோனில் பேசிய என் அம்மா,  உங்களுக்கு என்னவாயிற்று என்று வினவியுள்ளார். அப்போதுதான் எல்லா விவரமும் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அந்த நபருக்கு விபத்து நடந்துள்ளது. அதிலிருந்து அவர் நிறைய மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவதால் சோர்வாக இருந்துள்ளார். இதனால் அவர் தனது பெற்றோரிடம் சோர்வான குரலுடன் பேசினால் விபத்து நடந்தது தெரிந்துவிடுமோ என்று எண்ணி பேசாமல் இருந்துள்ளார். அதை அவர் என் அம்மாவிடம் கூற எல்லாப் பிரச்சனையும் தீர்ந்தது. 

இவ்வாறாக சாய்கிரண் பதிவிட்டுள்ளார்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் அந்த ஸ்விக்கி நபரை எவ்வளவு பாராட்டினால் தகுமென்று.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget