மேலும் அறிய

"கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வையுங்க" சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

மதத்துடன் அரசியல் கலப்பதை அனுமதிக்க முடியாது என திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி கோயிலில் நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார்.

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படவில்லையா? இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லட்டில் கலப்படம் நடந்தது உண்மைதான் என குஜராத்தின் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இந்த சூழலில், விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் செய்யப்பட்ட லட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. கலப்பட நெய்தான் லட்டு செய்ய பயன்படுத்தியது என ஆய்வு முடிவுகள் கூறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிராகரிக்கப்பட்ட நெய்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வருகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்: "கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதலமைச்சர் பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால், கலப்பட நெய் பயன்படுத்தப்படவில்லை என திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆய்வக அறிக்கை சிலவற்றை மறுக்கிறது. தெளிவாக கூறவில்லை. லட்டு செய்வதற்கு நிராகரிக்கப்பட்ட நெய்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கூறுகின்றன. நீங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால், பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

நீங்கள் அரசியல் சாசன பதவியை வகிக்கும் போது, அரசியலில் இருந்து கடவுள்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Embed widget