மேலும் அறிய

’மக்களே கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள்’ - மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு..

முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கினார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி  ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணல் சிற்பத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 19 லட்சத்து 87 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 32 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.


’மக்களே கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள்’ - மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு..


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இன்று 1.50 கோடியை தாண்டியது. ஒரே நாளில்  2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109-இல் இருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150-ல் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. முகக்கவசம் அணியாமல் இருப்பதாலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதாலும் மக்கள் இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மணல் சிற்பம் வரைந்துள்ளார். இவர், பிரபலங்கள், நாட்டுக்காக உழைத்தவர்களை கவுரவிக்கவும், மற்றும் சமூகநலன் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தவும் மணல் சிற்பம் வரைந்து அதன்மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். தற்போது, முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Choice is yours....Your Mask ....Your Life ,My SandArt at Puri beach in Odisha . <a href="https://twitter.com/hashtag/FightAgainstCOVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#FightAgainstCOVID19</a> <a href="https://t.co/h3FHM0ArBb" rel='nofollow'>pic.twitter.com/h3FHM0ArBb</a></p>&mdash; Sudarsan Pattnaik (@sudarsansand) <a href="https://twitter.com/sudarsansand/status/1383800750870974467?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

'CHOICE IS YOURS YOUR MASK YOUR LIFE' என்று மணல் சிற்பத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் முகக்கவசம் அணிந்தவாறும், அணியாத மற்றொருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போலவும் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget