மேலும் அறிய

தள்ளாடும் பொருளாதாரம்...பிரிட்டனில் இரண்டு பிரதமர்களை மாற்றியுள்ளனர்...ஆனால் இங்கு? சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு கேள்வி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா பெருந்தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

வேலையில்லா திண்டாட்டம் நாட்டை உலுக்கி வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.3% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் இதுவே அதிக வேலையின்மை விகிதம் ஆகும். ஆகஸ்ட் 2021இல், வேலையின்மை விகிதம் 8.35% ஆக இருந்தது. இதையடுத்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரிப்பின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.43 சதவீதமாக குறைந்துள்ளது என CMIE தெரிவித்திருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா பெருந்தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதேபோல, வேலாண்மை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் பேரழிவின் விளம்பில் இருக்கின்றனர் என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

"சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் தங்களது நிலுவைத் தொகையையும் கடனையும் செலுத்த முடியாமல் பேரழிவின் விளிம்பில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பொருளாதாரம் தள்ளாடுகிறது. இங்கிலாந்தில் ஒரு சில வாரங்களிலேயே இரண்டு பிரதமர்களை மாற்றினர். ஆனால் இங்கே, யாரும் முன் வரவில்லை. எதுவும் நடக்கவில்லை" என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார்.

பிரிட்டனில் சந்தை மற்றும் அரசியலில் கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியில், பதவியேற்ற 45 நாட்களிலேயே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக லிஸ் டிரஸ் அறிவித்தார். இதையடுத்து, அங்கு பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார். 

பதவியேற்ற ரிஷி சுனக், பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிராக ஸ்திர நிலையைக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget