மேலும் அறிய

2 மாதங்களில் 3-வது முறை.. பள்ளிகளின் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தப்படுத்துவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது.

பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்யும் நிர்வாகம்: 

இச்சூழலில், கடந்த மாதம், கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்தினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்திருந்தது.

இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு மாதமே ஆன நிலையில், அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை இரண்டு மாணவர்கள் சேர்ந்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு முதுநிலை தொடக்கப்பள்ளிக்கு கர்நாடக அரசின் குழு சென்று, மாணவர்களின் வாக்குமூலத்தை பெற்றுள்ளது.

பிரச்னைக்கு தீர்வு என்ன?

பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தப்படுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக எச்சரித்திருந்தார். "பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது மிகவும் கேவலமான செயல். இது போன்ற செயல்கள் சகிக்க முடியாதவை" என சித்தராமையா கூறியிருந்தார்.

அதுமட்டும் இன்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நிலவும் நிலை குறித்து ஆராய கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். பள்ளிகளில் கழிவறையை சுத்தப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

கடந்த மாதம், கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தன. இதை தொடர்ந்து, கர்நாடக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், "கல்வி, விளையாட்டு, தனித்திறமையை வெளிப்படுத்த உதவும் நடவடிக்கைகளில் மட்டுமே மாணவர்கள் ஈடுபட வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் இருந்து மாணவர்களை விலக்கி வைப்பது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுக்களின் கடமையாகும்" என குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க: CM Stalin In Spain : "ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரும் ஒற்றுமை" : முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தனி ரூட்டில் வானதி, நயினார்! அப்செட்டில் அண்ணாமலை! பாஜகவில் வெடிக்கும் சர்ச்சை”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடிAjithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Cut: சென்னை மக்களே! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
Delhi Election 2025: காலண்டருக்குள் ரூ.500 வைத்து ஆம் ஆத்மி விநியோகம்.! தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற பாஜக.!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
‘குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றெடுங்கள்’ – இந்துக்களை வலியுறுத்தும் விஸ்வ இந்து பரிஷத்!
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
Coimbatore PowerCut: கோவை மக்களே.!  நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
Coimbatore PowerCut: கோவை மக்களே.! நாளை (27.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Embed widget