மேலும் அறிய

சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( National Law University) மூன்றாம் அண்டு எல்.எல்.பி. பயின்று வந்த மாணவியின் உடல் விடுதியில் அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மாணவி எழுதிய கடிதத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெற்ற பிறகு அந்நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டனர். கூடுதல் டி.சி.பி. துவாரகா நிஷாந்த் குபதா தெரிவிக்கையில்,” சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மாணவி அவரது நண்பர்களிடம் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணங்கள் பற்றி பேசியிருக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் மாணவியை சொந்த ஊரான சென்னைக்கு ஒரு வாரம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.

அந்த மாணவி கடிதத்தில்,’ நான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணம் இல்லை. இப்படியான ஒரு முடிவு எடுத்ததற்கு பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ”எங்கள் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரிய இழப்பு. வருத்தத்தைத்தெரிவித்து கொள்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு இடர் காலத்தில் எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம். மாணவர்களின் நலனை பாதுகாப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். “ என்று தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget