மேலும் அறிய

‘சிறிய அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை குற்றமாகக் கருதக்கூடாது': பரிந்துரை வழங்கிய சமூக நீதி அமைச்சகம்

போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சமீப காலமாகவே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்ற 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல ப்ரீத்திகா சவுஹான், ஷபானா சயீத், அர்மான் கோலி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர்களும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். 
இந்நிலையில் போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

தற்போது  உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, போதைப் பொருளை வைத்திருப்பது, விற்பனை செய்வது, இறக்குமதி செய்வது போன்றவை குற்றமாகும்.  போதைப் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடிப்படும் போதைப்பொருட்களின் அளவை பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மிகச்சிறிய அளவில் போதைப்பொருட்கள் வைத்திருப்பதையும் அவற்றை பயன்படுத்துவதையும் குற்றமாக கருதக்கூடாது என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. 

இதையடுத்து போதை மருந்து சட்டத்தில் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உட்பட என்சிபி மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ)  ஆகிய துறைகளிடம்  வருவாய் துறை கடந்த மாதம் பரிந்துரை கேட்டிருந்தது. திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் அதற்கான காரணத்தையும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும், அவற்றை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக நடத்தி போதைப் பொருள் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், மறு வாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget