மேலும் அறிய

‘சிறிய அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை குற்றமாகக் கருதக்கூடாது': பரிந்துரை வழங்கிய சமூக நீதி அமைச்சகம்

போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சமீப காலமாகவே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்ற 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல ப்ரீத்திகா சவுஹான், ஷபானா சயீத், அர்மான் கோலி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர்களும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். 
இந்நிலையில் போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

தற்போது  உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, போதைப் பொருளை வைத்திருப்பது, விற்பனை செய்வது, இறக்குமதி செய்வது போன்றவை குற்றமாகும்.  போதைப் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடிப்படும் போதைப்பொருட்களின் அளவை பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மிகச்சிறிய அளவில் போதைப்பொருட்கள் வைத்திருப்பதையும் அவற்றை பயன்படுத்துவதையும் குற்றமாக கருதக்கூடாது என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. 

இதையடுத்து போதை மருந்து சட்டத்தில் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உட்பட என்சிபி மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ)  ஆகிய துறைகளிடம்  வருவாய் துறை கடந்த மாதம் பரிந்துரை கேட்டிருந்தது. திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் அதற்கான காரணத்தையும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும், அவற்றை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக நடத்தி போதைப் பொருள் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், மறு வாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Embed widget