![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gold Seize: சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தங்க கடத்தல்.. 6 மாதங்களில் அதிர்ச்சி.. சுங்கத்துறை அதிரடி
நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சார்பில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Gold Seize: சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தங்க கடத்தல்.. 6 மாதங்களில் அதிர்ச்சி.. சுங்கத்துறை அதிரடி Smuggled Gold Seizures Rise 43 percent To 2000 Kilo gram During April to September Gold Seize: சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தங்க கடத்தல்.. 6 மாதங்களில் அதிர்ச்சி.. சுங்கத்துறை அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/fb49eef30dda5a73acf4a583a89dabf11698242867083572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தங்கம் கடத்தல்:
உலகளவில் இந்தியாவிலும், சீனாவிலும் தான் தங்கம் பயன்பாடு இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் எப்போதுமே தங்கத்துக்கான தேவை இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே சமயம் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் வெளிநாட்டு சந்தையை காட்டிலும் உள்நாட்டில் தங்கத்தில் விலை அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு, துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை காட்டிலும் குறைவு. இதனால், கடத்தல் காரர்கள் துபாய் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் இருந்து தங்கத்தை வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
அதே நேரத்தில், தங்க கடத்தலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும், கடத்தல்காரர்கள் புது புது வழி முறைகளில் தங்க கடத்தலை ஜோராக மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் 2 ஆயிரம் கிலோ தங்கம் பறிமுதல்:
நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சார்பில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் மியான்மர், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் 1,400 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாக கேரளா மாநிலத்தில் 755.81 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 535.65 கிலோவும், தமிழ்நாட்டில் 519 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டை விட 43% அதிகம்:
இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் கூறுகையில், ”கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் 1400 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், 2022-23ஆம் நிதி ஆண்டில் சுமார் 3,800 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் வரி கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே போல, கடந்து ஆண்டு இதே காலக் கட்டத்தில் 1400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2,000 கிலோவாக அதிகரித்துள்ளது. இந்த தங்கம் கடத்தல் மியான்மர், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது. வான் வழி அல்லது கடல் வழியாகவே தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)