மேலும் அறிய

Smriti Irani Parliament: ஊழலைப் பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை; நீங்கள் இந்தியாவே இல்லை - ராகுல் பேச்சுக்கு ஸ்மிருதி இரானி காட்டம்

ஊழலை பற்றி பேச காங்கிரஸிற்கு தகுதி இல்லை என்றும், இந்தியாவில் ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் தான் என நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி பேசியுள்ளார்.

இன்று  இரண்டாவது நாளாக பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்.  இந்தியா அனைவருக்குமான வீடு, இந்தியா மக்கள் குரலை பிரதிபளிக்கும் நாடாக உள்ளது, ஆனால் அது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது” என பேசினார். 

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி விவாதத்திற்கு பதில் உரை அளித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. அப்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்தியா இந்தியா என கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,   “நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியாவில் ஊழல் இல்லை. உங்களைப் போன்றவர்கள் நன்கு தெரிந்துக்கொள்ள வேண்டும், ஆங்கிலேயர்களிடம் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் ராகுல் காந்தி முன்வைத்த விவாதத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மணிப்பூர் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. மணிப்பூர் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. இனியும் இருக்காது. இன்றைய விவாதத்தில் மிகவும் மோசமான பேச்சை இங்கு கேட்டோம். இந்தியாவுக்கு ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் தான். ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ் முதலில் அவர்கள் கூட்டணியில் இருக்கும் திமுகாவினரை பார்க்க வேண்டும். ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். காஷ்மீர் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக காங்கிரஸ் தரப்பில் என்ன செய்யப்பட்டது? அவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது மக்களுக்கு  பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டன” என மிகவும் ஆவேசமாக தனது பதிலுரையை பதிவு செய்தார்.

“உங்களுக்கு ராவணன் எவ்வளவோ பரவாயில்லை” - காரணத்தை சொல்லி மத்திய அரசை சாடிய ராகுல்காந்தி

Parliament: “பாஜகவினர் பயப்படாதீங்க; நான் பேசப்போவது இதைப்பற்றிதான்” - பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக பேசிய ராகுல்காந்தி!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget