மேலும் அறிய

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு...பகீர் ஆதாரங்கள்...சசி தரூர் குற்றச்சாட்டு...என்ன நடந்தது?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மிக தீவிரமான முறைகேடுகள் நடந்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் போட்டியிடுகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட பின்னர் சசி தரூர் தரப்பு ஒரு பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் எனவே அந்த மாநிலத்தில் உள்ள வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

"வழக்கமான நடைமுறைகளை ஏற்று கொள்வதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரியை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். பல்வேறு பிரச்னைகளைப் பற்றி அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அதன் விவரங்களை இப்போது செல்ல முடியாது" என சசி தரூரின் தேர்தல் முகவர் சல்மான் சோஸ் தெரிவித்துள்ளார்.

 

மிஸ்திரிக்கு தரூர் தரப்பினர் எழுதிய கடிதத்தில், "உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்தையில் உள்ள மிகக் கடுமையான முறைகேடுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர எங்கள் தரப்பு விரும்புகிறது. உண்மையில் நடந்தது மோசமான சம்பவம். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நம்பகத்தன்மையும், நேர்மையும் இல்லை. 

உத்தரபிரதேசத்தில் நடந்தது முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முறைகேடுகளில் அவரது ஆதரவாளர்கள் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே அறிந்திருந்தார் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை என்பதை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். அப்படி அவருக்கு தெரிந்திருந்தால் அதை நடக்க விட்டிருக்க மாட்டார். 

இந்திய தேசிய காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தலை களங்கப்படுத்த அனுமதிக்க கூடாது. வாக்குப்பெட்டிகளில் அதிகாரப்பூர்வமற்ற முத்திரைகள் இருந்தது. வாக்குச் சாவடிகளில் அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் இருந்தனர். முறைகேடாக வாக்குபதிவு நடந்தது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கறைபடிந்த செயல்முறையை நிலைநிறுத்த அனுமதித்தால் இந்தத் தேர்தல் எவ்வாறு சுதந்திரமாகவும் நியாயமாகவும் கருதப்படும். எனவே உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் செல்லாதவையாகக் கருதப்பட வேண்டும் என்று கோருகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Embed widget