மேலும் அறிய

Shahid Jameel resigns: மத்திய அரசை விமர்சித்த மூத்த விஞ்ஞானி ஷாகித் ஜமீல் ராஜினாமா

ஜனவரி மாதத்தில் கொரோனா இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்டதாக அரசும் அரசு அதிகாரிகளும் தாமாகவே முடிவு செய்துவிட்டனர். அதுவே, இரண்டாவது அலை தொடக்கமே அச்சுறுத்தும் வகையில் ஆரம்பித்ததற்குக் காரணம் என்றும் விஞ்ஞானி ஷாகித் ஜமீல் பேசியிருந்தார். 

கொரோனா இரண்டாவது அலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (INSACOG) மூத்த விஞ்ஞானி ஷாகில் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உறுதி செய்த ஜமீல், "ஆம் அது உண்மையே, ஆனால் அதற்கான விளக்கத்தை சொல்லத் தேவையில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
அண்மையில் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பற்றி ஜமீல் எழுதியிருந்தது, உலக நாடுகளின் கவனம் ஈர்த்தது. உள்நாட்டின் அதிருப்தியையும் பெற்றது.
அந்தக் கட்டுரையில் அவர், "இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. நாட்டில் தடுப்பூசிப் பற்றாக்குறை இருக்கிறது. அன்றாட கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தையும் தாண்டி பதிவாவது மிகவும் மோசமான சமிக்ஞை. 
முதல் அலையை ஒப்பிடும்போது இரண்டாம் அலை துவக்கமே அதிக பாதிப்புகளை கொண்டதாக இருந்தது. இதனால், இந்தியாவில் ஜூலை மாதம் வரை கொரோனா பாதிப்பு நீடிக்கலாம். 
 

Shahid Jameel resigns: மத்திய அரசை விமர்சித்த மூத்த விஞ்ஞானி ஷாகித் ஜமீல் ராஜினாமா
உண்மையில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால், அப்போதும் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் இரண்டாம் அலை ஏற்படுத்தாமல் தடுக்க பெருங்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்தனர். ஆனால், அதை மத்திய அரசு அசட்டை செய்துவிட்டது. மதநிகழ்வுகளும், தேர்தல் பிரச்சாரங்களும் தாராளமாக நடந்தது. இதனால், இன்று இந்தியாவில் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. 
 
இந்த வேளையில், கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும். கரோனா நோயாளிகளுக்கான மருத்துவப் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியரை பணிக்கு அழைத்து மருத்துவப் பணியாளர்கள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும். கடந்த ஜனவரிக்கு முன்னர் இருந்ததுபோல் தற்காலிக கோவிட் கேர் மையங்களை அமைக்க வேண்டும்.
இதை எனது சக விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர். ஆமோதிக்கின்றனர். ஆனால், கொள்கைகளை வகுப்பது அரசாங்கம் தானே. உண்மையான கள நிலவர ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க யாரும் தயாராக இல்லை. கள நிலவர ஆதாரங்கள் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க வேண்டியது நம் தேசம் எதிர்நோக்கியிருக்கும் இன்னொரு அவசரநிலை. இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்ட நிலையில் சரியான தரவுகளைக் கொண்டு கொள்கைகளை வகுப்பது மிகவும் அவசியமானது. இல்லாவிட்டால் இப்போது நிகழும் கரோனா மரணங்கள் நம் தேசத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்திவிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Shahid Jameel resigns: மத்திய அரசை விமர்சித்த மூத்த விஞ்ஞானி ஷாகித் ஜமீல் ராஜினாமா
 
இதுமட்டுமல்லாது பல்வேறு ஊடகங்களுக்கு அவர் பளிச் பேட்டி அளித்திருந்தார். ஜனவரி மாதத்தில் கரோனா இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்டதாக அரசும் அரசு அதிகாரிகளும் தாமாகவே முடிவு செய்துவிட்டனர். அதுவே, இரண்டாவது அலை தொடக்கமே அச்சுறுத்தும் வகையில் ஆரம்பித்ததற்குக் காரணம் என்றும் பேசியிருந்தார். 
இது மத்திய அரசில் உயர்மட்ட அளவில் புகையத் தொடங்கியது. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதா என்ற கண்டனக் குரல்களும் எழுந்தன.
இந்நிலையில், ஷாகில் ஜமீல் கரோனா வைரஸ் மரபணு மாற்றம் ஆராய்ச்சிக் கூட்டமைப்பில் (INSACOG) இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்சாகாக் என்ற கூட்டமைப்பு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. கரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவி 2  (SARS-CoV2 ) வைரஸின் மரபியல் மாற்றம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தக் குழுவானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பத்து இடங்களில் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு கொரோனா மரபியல் மாற்றம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget