மேலும் அறிய

Naga Tribes Rally: 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் வன்முறை.. இன்று பேரணியில் ஈடுபடும் நாகா மக்கள்.. மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு..!

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர். இந்த பேரணி ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மணிப்பூரின் நாகா பகுதிகளில் தமெங்லாங் தலைமையகம், சாண்டல் தலைமையகம், உக்ருல் தலைமையகம் மற்றும் சேனாபதி தலைமையகம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

பேரணி: 

மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியின மக்களின் அமைப்பான யுனைடெட் நாகா கவுன்சில் (யுஎன்சி) பல ஆண்டுகளாக, நாகா மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (ஆகஸ்ட் 9ம் தேதி) நாகா பகுதிகளில் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளது. தொடர்ந்து, மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புடனும் மத்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க இருக்கிறது. 

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தை:

மேலும், “கடந்த ஆகஸ்ட் 3, 2015 அன்று இந்திய அரசு (GOI) மற்றும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN) இடையே வரலாற்று கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தோ-நாகா அமைதி செயல்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. ஆனால், தற்போது வரை இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் அதிக தாமதம் ஏற்படுவது கவலைக்குரியது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளது. 

இந்தோ-நாகா இடையே நீடித்து வரும் அரசியல் பிரச்சினைக்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், நாகா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இந்த பேரணி நடைபெறவுள்ளது. அனைத்து மனசாட்சியுள்ள நாகா குடிமக்கள் பங்குதாரர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த பேரணியில் மிகுந்த ஒத்துழைப்பையும், பங்கேற்பையும், பிரார்த்தனையுடன் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

மணிப்பூர் கலவரம்:

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி குக்கி பழங்குடியின மக்களின் அமைப்பான குகி இன்பி மணிப்பூர், இந்த பேரணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. 

கடுமையான வன்முறைக்கு மத்தியில் நாகா பழங்குடிகளின் பேரணி நடைபெற இருப்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் உள்ள நாகா எம்.எல்.ஏக்கள் 10 பேரும் வருகின்ற 21ம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ககூடாது என நாகா பழங்குடியின மக்களின் மற்றொரு செல்வாக்கு மிக்க அமைப்பான ‘ நாகா ஹோஹோ’ வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, குகி இனத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்முறை: 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
Embed widget