மேலும் அறிய

Jharkhand CM: தலைமறைவானாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? - ராஞ்சியில் 144 தடை உத்தரவு

Jharkhand CM: ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், ராஞ்சியில் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Jharkhand CM: ஜார்கண்ட்டில்  முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவகலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியில் 144 தடை உத்தரவு:

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றின் 100 மீட்டர் சுற்றளவிற்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் எந்த விதமான போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹேமந்த் சோரன் தலைமறைவா? 

பணமோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கு நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று இருந்தனர். ஆனால், அங்கு அவர் இல்லாத நிலையில், தற்போதைய சூழலில் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்ல என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு, அந்த இல்லத்தில் சோதனை நடத்திய பிறகு, சில ஆவணங்கள் மற்றும் அவரது BMW காரை சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கூறி கைப்பற்றினர். இந்நிலையில் தான், ராஞ்சியில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சம்மனும், ஹேமந்த் சோரனின் பதிலும்:

பணமோசடி வழக்கில் கடந்த வாரம் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், ஜனவரி 29 அல்லது 31ம் தேதிகளில் விசாரணைக்கு நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் எழுதியிருந்த பதில் கடிதத்தில், “ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெறும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த காலகட்டத்தில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கட்டாயம் அந்த கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள்.  அப்படி இருக்கையில் 31 ஜனவரி 2024 அன்று அல்லது அதற்கு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தனது அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும், உங்களது அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே, இந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் 7 சம்மன்களை அனுப்பியும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன. இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தற்போது எங்கு இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாத சூழல் நிலவுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Embed widget