மேலும் அறிய

Sathankulam Murder Case: சாத்தான்குளம் கொலை வழக்கு : ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் ஜாமீன் மறுத்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் ஜாமீன் மறுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது என வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார். 


Sathankulam Murder Case: சாத்தான்குளம் கொலை வழக்கு : ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சாத்தான்குளம் கொலை: என்ன நடந்தது? 

முன்னதாக, 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி சாத்தான்குளம் காவல்துறையினர் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக தந்தை மகன் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவர்கள், ஜெயராஜும் பென்னிக்ஸும்.அப்போது ஜெயராஜின் குடும்பத்தினருக்கு தெரியாது மீண்டும் அவர்கள் உயிரோடு வரமாட்டார்கள் என்று. ஜெயராஜின் மனைவி செல்வராணியின் வாழ்க்கையை திருப்பி போட்ட சம்பவமானது அது.

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜும் பென்னிக்ஸும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் கடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்  கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜெயராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் ஜூன் 22 ஆம் தேதி  உயிரிழக்க மறு தினம் ஜுன் 23 ஆம் தேதி பென்னிக்ஸும் உயிரிழந்தார்.இந்த சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொரோனா கால சமூக இடைவெளியை ஒதுக்கி விட்டு தமிழகமே போராட்டத்தில் ஈடுபட்டது. 

 

சாத்தான்குளம் சம்பவத்தில் கணவன் மற்றும் மகனை இழந்த செல்வராணி துடித்து போனார்.தனது கணவன் மகன் அன்பினால் கட்டுண்டு இருந்தவருக்கு கானல் நீரானது வாழ்க்கை. தனது கணவனும் மகனும் வாழ்ந்த வீட்டில் குடியிருக்க இயலாமல் தவித்த செல்வராணி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனது மகள் பெர்சிஸ் வீட்டில்  வாழ துவங்கினார்.

 

தனது குடும்பத்தினருடன் பெர்சிஸ் விஜயாவாடாவில் வசித்து வந்தார். தனது தந்தை மகன் உயிரிழப்பை தொடர்ந்து தமிழக அரசு அளித்த வேலைவாய்ப்பை தொடர்ந்து தற்போது புளியங்குடியில் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.ஓராண்டு ஒருயுகமாக கழிந்து கணவர், அன்பு மகனின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளார் ஜெயராஜின் மனைவி.

தனது தம்பி பென்னிக்ஸ் தினந்தோறும் தனது குழந்தைகளிடம் தொலைபேசியில் பேசி விடுவார் என்பதை நினைவு கூறும் பென்னிக்ஸ் சகோதரி பெர்சிஸ், தனது சகோதரன் அன்றைய தினமும் கூப்பிட்டான், ஆனால் அன்றைய அழைப்பை ஏற்கவில்லை என மனம் வெம்புகிறார்.


வழக்கம்போல் கூப்பிடுவதாக நினைத்தே அழைப்பை ஏற்காததை நினைத்து இப்போதும் வருந்துவதாக கூறும் இவர் ஒருவேளை காவல்நிலையம் செல்வது தொடர்பாக தெரிவிக்கவே பென்னிக்ஸ் தன்னை அழைத்து இருக்கலாம், மாபெரும் தவறு செய்து விட்டதாக தினமும் கண்ணீர் வடிக்கும் பெர்சிஸ், தனது குழந்தைகள் மாமா எப்போது வருவார் சாக்லேட் வாங்கி தருவார் என கேட்கும் போதெல்லாம் பதில் சொல்ல முடியாமல் கண்கள் கசிய வாய்மூடி மவுனம் காப்பதாக சொல்கிறார்.

தனது தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும், இருவரின் இறப்புக்கும் நல்ல நீதி கிடைக்க வேண்டும் என்கின்றனர் ஜெயராஜ் குடும்பத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education Policy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.