மேலும் அறிய

Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

உலகப்புகழ் பெற்ற மகரஜோதி தரிசனம் சற்றுமுன் நடைபெற்றது. சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்களால் எழுப்பப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரஜோதி தரிசனத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதி தரிசனம் இன்று மாலை  நடைபெற்றது. பந்தர ராஜவம்சத்தினர் தலைமையில் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் வலியகோயிக்கல் பகுதியில் இருந்து திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள்  இருந்து சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.   


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

திருவாபரண ஊர்வலம் பம்பையை நெருங்கிய நேரத்தில்  சபரிமலையில் மகர சங்கிரம பூஜை நடத்தப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் இதுவும் ஒன்று. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த பூஜை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையான கவடியாரில் இருந்து கொண்டு வரப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

இந்த திருவாபரணங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக கொண்டு செல்லப்பட்டது. திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், நடை அடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் சரியாக மாலை 6.51 மணிக்கு காட்சி தந்தது. தொடர்ந்து மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.


Sabarimalai Magara Jothi : விண்ணைப் பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்...! கண்குளிரும் வகையில் காட்சி தந்த மகரஜோதி தரிசனம்..!

மகரஜோதியை தரிசிப்பதற்காக 8 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது, பக்தர்கள் சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா என்று எழுப்பி பக்திகோஷம் விண்ணை பிளந்தது. மகரஜோதியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் மகரஜோதி தரிசனத்திற்கு தினசரி 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவாபரண ஊர்வலத்தில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக எட்டு இடங்களில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

ஐயப்பனுக்கு வரும் 18-ந் தேதி வரை நெய் அபிஷேகம் நடைெபுறும். வரும் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிவடைந்த பிறகும், 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்தாண்டிற்கான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget