மேலும் அறிய

பாகிஸ்தான், சீனாவுக்கு மெசேஜ் சொல்கிறதா பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்..!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் மோடி:

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறையாக உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். மோடியின் இந்த பயணம், இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.

"இந்தியப் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றுவது இதுவே முதல் முறை. பிரதமர் அரசுமுறை பயணமாகச் செல்கிறார். இது மிக உயர்ந்த கவுரவத்தை குறிக்கிறது. அவர் பெறும் கவுரவம், வெகு சிலருக்கே, இதுவரை கிடைத்துள்ளது.

மோடியின் அமெரிக்க பயணம் பாகிஸ்தான், சீனாவுக்கு அனுப்பும் மெசேஜா?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு முறை உரையாற்றியதில்லை. எனவே, இது முதல் முறையாக இருக்கும். உலகம் முழுவதும், மிகச் சிலரே அதைச் செய்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா. எனவே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றியவர்கள் மிகக் குறைவு. முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதுகிறேன். அதன், விளைவுகள் பின்னர் பார்க்கலாம்" என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மோடியின் அமெரிக்க பயணம், இந்திய அமெரிக்க உறவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "குறிப்பிடத்தக்க விளைவுகளை கொண்டிருக்கும். மேலும், இவை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும். அதை என்னால் இப்போது சொல்ல முடியாது.

இந்த பயணம், பாகிஸ்தான், சீனாவுக்கு எந்த மாதிரியான செய்தியை அனுப்பும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "ஒரு பிரதமர் ஒரு நாட்டிற்குச் சென்றால், அது நமது (இந்தியாவின்) உறவை முன்னேற்றுவதற்காகத்தான். இது ஒரு உலகமயமாக்கப்பட்ட உலகம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

அதனால் ஏதாவது நடந்தால், அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். எங்கள் உறவுகளின் கண்ணோட்டத்தில், எங்கள் நலன்களுக்காக நாங்கள் அதைப் பார்க்கிறோம்" என்றார்.

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஜூன் 18ஆம் தேதி அமெரிக்காவின் 20 வெவ்வேறு நகரங்களில் ‘இந்திய ஒருமைப்பாட்டு அணிவகுப்பு’ நடத்தப்பட உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை சிறப்பித்துக் காட்டும் வகையில், ஜூன் 21ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget