மேலும் அறிய

RSS: "இதெல்லாம் எங்ககிட்ட கேட்கக்கூடாது" தேசியகொடி ஏற்றாதது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதில்..

"அகண்ட பாரதம் எப்போது வரும் என்று சரியாக சொல்ல முடியாது" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், சனாதன தர்மம், பாரத் பெயர் மாற்ற விவகாரம் ஆகியவை அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதில், இந்தியா பெயர் மாற்ற விவகாரம் சர்ச்சையாவதற்கு முன்பே, "இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்ற பெயரை மக்கள் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறியவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக பாஜக செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்த கருத்து, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இடஒதுக்கீடு:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "நமது சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது. சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்" என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இடஒதுக்கீடு குறித்து விரிவாக பேசிய மோகன் பகவத், "சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்தள்ளினோம். நாம் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது 2000 ஆண்டுகளாக தொடர்ந்தது. நாங்கள் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, சில சிறப்பு தீர்வுகளை வழங்க வேண்டும்.

அதில் இட ஒதுக்கீடும் ஒன்று. எனவே, அத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். நாம் பார்க்காவிட்டாலும் சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது.

அகண்ட பாரதம்:

இடஒதுக்கீடு என்பது மரியாதையை வழங்குவது போன்று. நிதி அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. 2000 ஆண்டுகளாக, குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் பாகுபாடுகளை எதிர்கொள்ளும்போது, பாகுபாட்டை சந்திக்காத நம்மால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு சில சிக்கல்களை ஏற்றுக்கொள்ள முடியாதா?" என்றார்.

அகண்ட பாரதம் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய மோகன் பகவத், "அகண்ட பாரதம் எப்போது வரும் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் அதற்காக உழைத்தால், நீங்கள் வயதாகிவிடும் முன், அது நிஜமாவதை நீங்கள் காண்பீர்கள். 

ஏனென்றால், இந்தியாவிலிருந்து பிரிந்தவர்கள் தவறு செய்ததாக நினைக்கும் சூழ்நிலைகள் மாறி வருகின்றன. அவர்கள் மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியாவாக மாறுவதற்கு அவர்கள் வரைபடத்தில் உள்ள கோடுகளை அழித்தால் போது என நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி நடக்காது. இந்தியாவாக இருப்பது இந்தியாவின் இயல்பை ("ஸ்வபாவ்") ஏற்றுக்கொள்வதாகும்.

தேசிய கொடி ஏற்றாததற்கு காரணம் என்ன?

சுதந்திரம் பெற்றதில் இருந்து 2002ஆம் ஆண்டு வரை, மஹால் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த மோகன் பகவத், "ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் நாங்கள் எங்கிருந்தாலும் தேசியக் கொடியை ஏற்றுவோம். நாக்பூரில் உள்ள மஹால் மற்றும் ரெஷிம்பாக் ஆகிய இரு வளாகங்களிலும் கொடியேற்றப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை மக்கள் எங்களிடம் கேட்கக் கூடாது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget