மேலும் அறிய

`6 பத்திரிகையாளர்கள் கொலை.. 44 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு!’ - பத்திரிகை சுதந்திரம் பற்றிய பகீர் அறிக்கை!

கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவில் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 108 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகவும், 13 ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவில் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 108 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகவும், 13 ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் பலரும் காவல் நிலையங்களுக்கு சம்மன் அளித்து வரவழைக்கப்படுவது, வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படுவது, பத்திரிகையாளர்களின் வீடுகளில் ரெய்ட் நிகழ்த்துவது, பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவது முதலானவை நிகழ்ந்திருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Rights and Risks Analysis Group (RRAG) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள `இந்திய பத்திரிகை சுதந்திரம் அறிக்கை 2021’ என்ற அறிக்கையில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பத்திரிகையாளர்களும், ஊடக நிறுவனங்களும் கடந்த ஆண்டு குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

உயிரிழந்த 6 பத்திரிகையாளர்களுள் உத்தரப் பிரதேசம், பீஹார் மாநிலங்களில் இரண்டு பத்திரிகையாளர்களும், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பெண் பத்திரிகையாளர்கள் கைது, சம்மன், வழக்குப் பதிவு முதலானவற்றை எதிர்கொண்டதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. 

`6 பத்திரிகையாளர்கள் கொலை.. 44 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு!’ - பத்திரிகை சுதந்திரம் பற்றிய பகீர் அறிக்கை!

ஜம்மு காஷ்மீரில் 25 ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டு அந்த மாநிலம் இந்தப் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. 23 ஊடக நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் 16 ஊடக நிறுவனங்களும், திரிபுராவில் 15 ஊடக நிறுவனங்களும், டெல்லியில் 8 ஊடக நிறுவனங்களும், பீஹாரில் 6 ஊடக நிறுவனங்களும், அசாமில் 5 ஊடக நிறுவனங்களும், ஹரியானாவிலும் மகாராஷ்டாவிலும் தலா 3 ஊடக நிறுவனங்களும், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 2 ஊடக நிறுவனங்களும், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 1 ஊடக நிறுவனங்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

RRAG அமைப்பின் இயக்குநர் சுஹாஸ் சக்மா, `ஜம்மு காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பத்திரிகை சுதந்திரம் மீதான அடக்குமுறையே நாட்டில் குறைந்து வரும் ஜனநாயக வெளியைக் குறிக்கிறது’ எனக் கூறியுள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு, சுமார் 24 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தங்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டும் உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த 24 பத்திரிகையாளர்களுள் 17 பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

`6 பத்திரிகையாளர்கள் கொலை.. 44 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு!’ - பத்திரிகை சுதந்திரம் பற்றிய பகீர் அறிக்கை!

பத்திரிகையாளர்களை உடல்ரீதியான தாக்குதலுக்குக் காவல்துறையினர் உள்ளாக்கிய நிகழ்வுகள் அதிகளவில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு, பல்வேறு மாநிலங்களில் 44 பத்திரிகையாளர்களின் மீது வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

இதில் அதிகளவிலான வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 44 பத்திரிகையாளர்களுள் 21 பத்திரிகையாளர்களுக்கு விரோதத்தை வளர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 153ஆம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget