மேலும் அறிய

Baba Ramdev : மீண்டும் இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு.. பாபா ராம்தேவ் கிளப்பிய புதிய சர்ச்சை..!

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

இந்நிலையில், யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மத குருமார்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்லாமியர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகின்றனர். பின்னர், மனதில் தோன்றிய பாவத்தை எல்லாம் செய்கிறார்கள். இந்து பெண்களை கடத்துகின்றனர்.

பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள். நம் இஸ்லாமிய சகோதரர்கள் பல பாவங்களை செய்கின்றனர். ஆனால், தொழுகை செய்ய வேண்டும் என அவர்கள் கற்பிக்கப்பட்டதால் அதை தவறாமல் செய்துவிடுகின்றனர்" என்றார்.

ராம்தேவ் பேசிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை தூண்டியதாக அவர் மீது இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசியான பத்தாய் கான் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

வழக்கு குறித்து பேசிய பதி சௌதான் காவல் நிலைய அதிகாரி பூதாரம், "இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல் செய்தல், எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டுவது) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவ் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று, பல முறை பேசியிருக்கிறார். குறிப்பாக, கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து அவர் பேசியது பெரும் பிரச்னையை கிளப்பியது.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் 1000 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்திய மருத்து சங்கம் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

இது தொடர்பாக கடந்தாண்டு தாக்கல் செய்து மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப், "பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த பேச்சுக்கள் கட்டுப்பாடற்று உள்ளன. 

அமெரிக்காவைப் போல இங்கு சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால், எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். ”வெறுப்பு பேச்சில் மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து பேசிய அவர், "ஒருவரை கொல்வதை போன்று வெறுப்பு பேச்சில் பல அடுக்குகள் உள்ளன. 

பல விதமாக அதை செய்யலாம். மெதுவாகவும் அல்லது வேறு விதமாகவும் செய்யலாம். சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் நம்மைக் கவர்கின்றனர். அரசாங்கம் ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. ஆனால், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். இது ஒரு சாதாரண பிரச்சனையா?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SDPI Join DMK Alliance : திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.! SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?
Rajya Sabha elections Candidate : யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
யார் அந்த 6 பேர்.! திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட்டை கைப்பற்றப்போவது யார்.? வெளியான சீக்ரெட் லிஸ்ட்
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக கூட்டணியில் புதிய கட்சி, மோட்டரோலா சலுகை, விமான விபத்து - 11 மணி வரை இன்று
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திமுக - காங்., பேச்சுவார்த்தை, எகிறிய தங்கம், ஸ்டாலின் கட்டளை - தமிழகத்தில் இதுவரை
Vadapalani to Poonamallee metro train: ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
கொத்தாக 11 அறிவிப்புகள்.! அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- குஷியில் பூசாரிகள்
கொத்தாக 11 அறிவிப்புகள்.! அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- குஷியில் பூசாரிகள்
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Embed widget