மேலும் அறிய

Baba Ramdev : மீண்டும் இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு.. பாபா ராம்தேவ் கிளப்பிய புதிய சர்ச்சை..!

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

இந்நிலையில், யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மத குருமார்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்லாமியர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகின்றனர். பின்னர், மனதில் தோன்றிய பாவத்தை எல்லாம் செய்கிறார்கள். இந்து பெண்களை கடத்துகின்றனர்.

பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள். நம் இஸ்லாமிய சகோதரர்கள் பல பாவங்களை செய்கின்றனர். ஆனால், தொழுகை செய்ய வேண்டும் என அவர்கள் கற்பிக்கப்பட்டதால் அதை தவறாமல் செய்துவிடுகின்றனர்" என்றார்.

ராம்தேவ் பேசிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை தூண்டியதாக அவர் மீது இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசியான பத்தாய் கான் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

வழக்கு குறித்து பேசிய பதி சௌதான் காவல் நிலைய அதிகாரி பூதாரம், "இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல் செய்தல், எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டுவது) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவ் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று, பல முறை பேசியிருக்கிறார். குறிப்பாக, கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து அவர் பேசியது பெரும் பிரச்னையை கிளப்பியது.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் 1000 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்திய மருத்து சங்கம் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

இது தொடர்பாக கடந்தாண்டு தாக்கல் செய்து மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப், "பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த பேச்சுக்கள் கட்டுப்பாடற்று உள்ளன. 

அமெரிக்காவைப் போல இங்கு சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால், எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். ”வெறுப்பு பேச்சில் மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து பேசிய அவர், "ஒருவரை கொல்வதை போன்று வெறுப்பு பேச்சில் பல அடுக்குகள் உள்ளன. 

பல விதமாக அதை செய்யலாம். மெதுவாகவும் அல்லது வேறு விதமாகவும் செய்யலாம். சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் நம்மைக் கவர்கின்றனர். அரசாங்கம் ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. ஆனால், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். இது ஒரு சாதாரண பிரச்சனையா?" என கேள்வி எழுப்பினார்.

தலைப்பு செய்திகள்

PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget