மேலும் அறிய

Rahul Gandhi: “என் பதவியை பறிக்கலாம்; மக்களுடனான உறவை பிரிக்க முடியாது” - வயநாட்டில் ராகுல்காந்தி அதிரடி

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். அடுத்தாண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்  செய்யப்பட்டார். 

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதற்கு மறுநாளே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி முற்றிலுமாக முடங்கி போனதற்கு ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு கல்பெட்டா நகரில் நடந்த 'சத்யமேவ ஜெயதே' என்னும் பேரணியில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த சாலை பேரணியில் காங்கிரஸ் கட்சியின் கொடிகளுக்கு பதிலாக நூற்றுக்கணக்கான  தொண்டர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு உடன் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது, “நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான ஒரு தகுதி தான். எனது எம்.பி. பதவியை பறிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவால் தடுக்க முடியாது. இந்த வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன் தான் மக்கள் பிரதிநிதி. நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை என்ற போதிலும் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார்கள். சுதந்திரமான நாட்டில் வாழ வேண்டும் என்பதே இந்திய மக்களின் நோக்கமாகும். ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் மதிப்பவன் நான். தற்போது நடப்பது இருவித சமூக கண்ணோட்டங்களுக்குன் இடையேயான மோதலாகும். 

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் வயநாடு மக்களுக்காக போராடுவேன்.  என் பதவியை பறித்தாலும் இந்த தொகுதி மக்களுடனான உறவை பறிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக போராடுவேன்” என தெரிவித்தார். மேலும், “நாடாளுமன்றம் சென்று இருந்த போது அதானி குறித்து சில கேள்விகளை கேட்டேன். முதல்முறையாக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அரசே செயல்பட்டதை பார்த்தேன். பாஜக மக்களை பிளவுப்படுத்துவதோடு, மோதலையும் உருவாக்குகிறது. பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்” என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget