மேலும் அறிய

"மோடியின் கெட்ட சகுணத்தால் தோற்றோம்" சர்ச்சையை கிளப்பிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடியை கெட்ட சகுணத்தால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தோற்றோம் என குறிப்பிட்ட ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்டிருந்தார்.

"இந்தியாவின் தோல்விக்கு பிரதமர் மோடியின் அபசகுணமே காரணம்"

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, "டிவியில் வந்து இந்து - முஸ்லிம் பற்றி பேசுகிறார். சில சமயம் கிரிக்கெட் போட்டிக்கு செல்கிறார். நமது வீரர்கள், உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால், கெட்ட சகுணத்தால் போட்டியை இழந்தோம். பிரதமர் என்றால் அபசகுணம் பிடித்த மோடி என்று அர்த்தம்" என்றார்.

ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், இதுகுறித்து பேசுகையில், "இந்த கருத்து வெட்கக்கேடானது. கண்டிக்கத்தக்கது. அவமானகரமானது" என்றார்.

"வாழ்நாளில் ஒரு நாள் கூட உழைக்காத 55 வயது நபர் ஒருவர், பல ஆண்டுகளாக ஒட்டுண்ணிகள் போன்று நாட்டை ஊழலினால் சுரண்டிய குடும்பத்தை சேர்ந்தவர். பத்தாண்டுகளில் நாட்டை பொருளாதார ரீதியாக அழித்த அரசாங்கம். நமது பிரதமரை இப்படிக் குறிப்பிடுவது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. மன உறுதியற்ற தன்மையை குறிக்கிறது" என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்:

பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்ட ராகுல் காந்தி ஒரு தேச விரோதி என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாடினார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவின் புகாருக்கு விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு கால அவகாசம் 
வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்த புகாரில், "ராஜஸ்தான் பிரச்சாரத்தின் போது இழிவான சொற்களை ராகுல் காந்தி பயன்படுத்தினார். பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாடுகளை சுமத்தியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின்படி, போட்டியாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதனால், நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget