மேலும் அறிய

"மோடியின் கெட்ட சகுணத்தால் தோற்றோம்" சர்ச்சையை கிளப்பிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடியை கெட்ட சகுணத்தால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தோற்றோம் என குறிப்பிட்ட ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்டிருந்தார்.

"இந்தியாவின் தோல்விக்கு பிரதமர் மோடியின் அபசகுணமே காரணம்"

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, "டிவியில் வந்து இந்து - முஸ்லிம் பற்றி பேசுகிறார். சில சமயம் கிரிக்கெட் போட்டிக்கு செல்கிறார். நமது வீரர்கள், உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால், கெட்ட சகுணத்தால் போட்டியை இழந்தோம். பிரதமர் என்றால் அபசகுணம் பிடித்த மோடி என்று அர்த்தம்" என்றார்.

ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், இதுகுறித்து பேசுகையில், "இந்த கருத்து வெட்கக்கேடானது. கண்டிக்கத்தக்கது. அவமானகரமானது" என்றார்.

"வாழ்நாளில் ஒரு நாள் கூட உழைக்காத 55 வயது நபர் ஒருவர், பல ஆண்டுகளாக ஒட்டுண்ணிகள் போன்று நாட்டை ஊழலினால் சுரண்டிய குடும்பத்தை சேர்ந்தவர். பத்தாண்டுகளில் நாட்டை பொருளாதார ரீதியாக அழித்த அரசாங்கம். நமது பிரதமரை இப்படிக் குறிப்பிடுவது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. மன உறுதியற்ற தன்மையை குறிக்கிறது" என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்:

பிரதமர் மோடியை அபசகுணம் பிடித்தவர் என குறிப்பிட்ட ராகுல் காந்தி ஒரு தேச விரோதி என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாடினார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவின் புகாருக்கு விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு கால அவகாசம் 
வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்த புகாரில், "ராஜஸ்தான் பிரச்சாரத்தின் போது இழிவான சொற்களை ராகுல் காந்தி பயன்படுத்தினார். பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாடுகளை சுமத்தியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின்படி, போட்டியாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. இதனால், நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget