மேலும் அறிய

பிரதமர் மோடிக்கு உலக அளவில் மரியாதை ஏன்? - ராஜஸ்தான் முதல்வர் விளக்கம்

பன்ஸ்வாராவில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் கெலாட் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அளவில் ஏன் சிறப்பான மரியாதை செலுத்தப்படுகிறது என்பது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்துள்ள விளக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜஸ்தானில் 1913ஆம் ஆண்டு ஆங்கிலேய ராணுவம் நடத்திய தாக்குதலில் பன்ஸ்வாரா, தாம் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் பழங்குடியினர் எனும் நிலையில், இந்த தாம் பகுதி, ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் உள்ள பன்ஸ்வாராவில் அமைந்துள்ளது.

இந்தத் துயர சம்பவத்தை நினைவுகோரும் நிகழ்ச்சி இன்று பன்ஸ்வாராவில் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில்  பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் கெலாட் இருவரும் கலந்துகொண்டனர்.

 

ஒரே மேடையில் இருவரும் தோன்றிய நிலையில், தொடர்ந்து பேசிய அசோக் கெலாட், "பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் ​​அவருக்கு சிறப்பான மரியாதை கிடைக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் அவருக்கு மரியாதை கிடைக்கிறது. ஜனநாயகம் உயிர்ப்புடன் உள்ளது" எனப் பேசியுள்ளார். 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ரத்லாம்-துங்கர்பூர் மற்றும் பன்ஸ்வாரா இடையேயான ரயில்வே திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறும் அசோக் கெலாட் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நானும் அசோக் கெலாட்டும் முதலமைச்சர்களாக இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் முதலமைச்சர்களில் அவர்தான் மூத்தவர். இப்போது மேடையில் அமர்ந்திருப்பவர்களிலும் மூத்த முதலமைச்சர் அசோக் கெலாட்” என்று பேசினார்.

 

மேலும், “பழங்குடியின மக்களின் போராட்டத்துக்கும் தியாகத்துக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் சரியான இடம் அளிக்கப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முந்தைய இந்தத் தவறை இன்று இந்த தேசம் திருத்திக் கொண்டு வருகிறது. பழங்குடியின மக்கள் இன்றி இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் முழுமை அடையாது" என்றும் பேசியுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget