மேலும் அறிய

"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!

ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுகின்றனர் என்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊழல் விழிப்புணர்வு வாரத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன" என்றார்.

"பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள ஊழல்"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை என்பதோடு சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மெகஸ்தனிஸ் எழுதினார். அவர்கள் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருக்கும். நமது முன்னோர்களைப் பற்றி ஃபா-ஹியான் என்பவரும் இதே போன்ற குறிப்புகளைக் கூறியுள்ளார்.

நம்பிக்கை என்பது, சமூக வாழ்வின் அடித்தளம். அதுவே ஒற்றுமையின் ஊற்றுக்கண். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே ஆட்சிக்கான சக்தியின் ஆதாரமாகும். ஊழல் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது.

இது மக்களிடையே சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று சர்தார் படேலின் பிறந்த நாளன்று நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே காக்க நாம் உறுதி ஏற்போம். இது வெறும் சடங்கு அல்ல. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழி. அதை நிறைவேற்ற வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு:

அறநெறி என்பது இந்திய சமுதாயத்தின் லட்சியம். பொருட்கள், பணம் அல்லது சொத்துகளைச் சேர்ப்பதே நல்வாழ்வின் தரம் என்று சிலர் கருதத் தொடங்கும் போது, அவர்கள் அந்த லட்சியத்திலிருந்து விலகி, ஊழல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதில் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

எந்தவொரு பணியும் சரியான உணர்வுடனும் உறுதியுடனும் செய்யப்பட்டால், வெற்றி நிச்சயம். சிலர் அசுத்தத்தை நமது நாட்டின் தலைவிதி என்று கருதினர். ஆனால், வலுவான தலைமை, அரசியல் உறுதி, குடிமக்களின் பங்களிப்பு ஆகியவை தூய்மைத் துறையில் நல்ல பலன்களை அளித்துள்ளன.

அதேபோல், ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுவது சரியல்ல. ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற மத்திய அரசின் கொள்கை ஊழலை வேரோடு ஒழிக்கும். ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Smriti Mandhana: “உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
Women's WC Prize Money: யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
Sengottaiyan:
Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smriti Mandhana: “உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
Women's WC Prize Money: யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
Sengottaiyan:
Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
IND W vs SA W Final: வரலாறு மேல் வரலாறு.. ஒரே உலகக்கோப்பையில் இத்தனை சாதனைகளா..! சல்யூட் லேடீஸ்!
IND W vs SA W Final: வரலாறு மேல் வரலாறு.. ஒரே உலகக்கோப்பையில் இத்தனை சாதனைகளா..! சல்யூட் லேடீஸ்!
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! துரோகிகளுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டும் - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! துரோகிகளுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டும் - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?”  பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
Eps vs Seeman: ”இது தான் அரசியல் நாகரிகமா?” பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட இபிஎஸ்! சீமானை வெளுத்து வாங்கும் அதிமுகவினர்
சபரிமலை சீசனுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு ! முன்பதிவு எப்போது ? பயணிகளுக்கு குட் நியூஸ்
சபரிமலை சீசனுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு ! முன்பதிவு எப்போது ? பயணிகளுக்கு குட் நியூஸ்
Embed widget