மேலும் அறிய

"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!

ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுகின்றனர் என்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊழல் விழிப்புணர்வு வாரத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன" என்றார்.

"பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள ஊழல்"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை என்பதோடு சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மெகஸ்தனிஸ் எழுதினார். அவர்கள் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருக்கும். நமது முன்னோர்களைப் பற்றி ஃபா-ஹியான் என்பவரும் இதே போன்ற குறிப்புகளைக் கூறியுள்ளார்.

நம்பிக்கை என்பது, சமூக வாழ்வின் அடித்தளம். அதுவே ஒற்றுமையின் ஊற்றுக்கண். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே ஆட்சிக்கான சக்தியின் ஆதாரமாகும். ஊழல் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது.

இது மக்களிடையே சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று சர்தார் படேலின் பிறந்த நாளன்று நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே காக்க நாம் உறுதி ஏற்போம். இது வெறும் சடங்கு அல்ல. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழி. அதை நிறைவேற்ற வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு:

அறநெறி என்பது இந்திய சமுதாயத்தின் லட்சியம். பொருட்கள், பணம் அல்லது சொத்துகளைச் சேர்ப்பதே நல்வாழ்வின் தரம் என்று சிலர் கருதத் தொடங்கும் போது, அவர்கள் அந்த லட்சியத்திலிருந்து விலகி, ஊழல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதில் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

எந்தவொரு பணியும் சரியான உணர்வுடனும் உறுதியுடனும் செய்யப்பட்டால், வெற்றி நிச்சயம். சிலர் அசுத்தத்தை நமது நாட்டின் தலைவிதி என்று கருதினர். ஆனால், வலுவான தலைமை, அரசியல் உறுதி, குடிமக்களின் பங்களிப்பு ஆகியவை தூய்மைத் துறையில் நல்ல பலன்களை அளித்துள்ளன.

அதேபோல், ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுவது சரியல்ல. ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற மத்திய அரசின் கொள்கை ஊழலை வேரோடு ஒழிக்கும். ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
Embed widget