மேலும் அறிய

"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!

ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுகின்றனர் என்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊழல் விழிப்புணர்வு வாரத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன" என்றார்.

"பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள ஊழல்"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை என்பதோடு சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மெகஸ்தனிஸ் எழுதினார். அவர்கள் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருக்கும். நமது முன்னோர்களைப் பற்றி ஃபா-ஹியான் என்பவரும் இதே போன்ற குறிப்புகளைக் கூறியுள்ளார்.

நம்பிக்கை என்பது, சமூக வாழ்வின் அடித்தளம். அதுவே ஒற்றுமையின் ஊற்றுக்கண். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே ஆட்சிக்கான சக்தியின் ஆதாரமாகும். ஊழல் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது.

இது மக்களிடையே சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று சர்தார் படேலின் பிறந்த நாளன்று நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே காக்க நாம் உறுதி ஏற்போம். இது வெறும் சடங்கு அல்ல. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழி. அதை நிறைவேற்ற வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு:

அறநெறி என்பது இந்திய சமுதாயத்தின் லட்சியம். பொருட்கள், பணம் அல்லது சொத்துகளைச் சேர்ப்பதே நல்வாழ்வின் தரம் என்று சிலர் கருதத் தொடங்கும் போது, அவர்கள் அந்த லட்சியத்திலிருந்து விலகி, ஊழல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதில் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

எந்தவொரு பணியும் சரியான உணர்வுடனும் உறுதியுடனும் செய்யப்பட்டால், வெற்றி நிச்சயம். சிலர் அசுத்தத்தை நமது நாட்டின் தலைவிதி என்று கருதினர். ஆனால், வலுவான தலைமை, அரசியல் உறுதி, குடிமக்களின் பங்களிப்பு ஆகியவை தூய்மைத் துறையில் நல்ல பலன்களை அளித்துள்ளன.

அதேபோல், ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுவது சரியல்ல. ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற மத்திய அரசின் கொள்கை ஊழலை வேரோடு ஒழிக்கும். ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget