மேலும் அறிய

Pragya Thakur | ‘நான் கபடி ஆடுவதை வீடியோ எடுத்தவர் ஒரு ராவணன்': சாபம் விட்ட பிரக்யா சிங் தாகூர்!!

ஜூலை மாதம் பிரக்யா சிங் தாகூர் நவராத்திரி விழாவில் நடனமாடும் வீடியோ சமூக ஊடங்களில் பேசும் பொருளானது.

தான் கபடி விளையாடும் வீடியோவை எடுத்தவரை ராவணன் என அழைத்துள்ளார் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். அவருடைய முதுமைக் காலமும், அடுத்த பிறவியும் நாசமாக போகும் என்றும் பிரக்யா சிங் சபித்துள்ளார். 

கடந்த 2008ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், பிரக்யா சிங் தாக்குரின் வாகனம் பயன்படுத்தப்பட்டது என புலன் விசாரணையில் தெரிய வந்தது.  இந்த வழக்கில், பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதும், அவர்கள் மூலம் குண்டு வெடிப்பு நாசவேலை நடத்தப்பட்டதும் காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. 

மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய சேர்க்கப்பட்ட பிரக்யா சிங் தாகூர், 2017  ஆண்டு பிணை வழங்கப்படுவதற்கு முன்னர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 இந்நிலையில் ஏற்கெனவே சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், 2017ல் தேசிய புலனாய்வு முகமை பிரக்யா சிங் மீது பதிவுசெய்யப்பட்ட கடுமையான குற்றப்பிரிவுகளை தளர்த்தினர். இதனையடுத்து, நிபந்தனை ஜாமினில் வெளியே விடப்பட்டார். 2021 ஜனவரியில், அவரின் மோசமான உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மும்பை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தாகூரை நேரில் ஆஜாரகுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து உத்தரவிட்டது. பல காலமாக சக்கர நாற்காலியில் இருந்த அவருக்கு, அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவ காரணங்களுக்காக பிணை வழங்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பிரக்யா சிங் தாகூர் நவராத்திரி விழாவில் நடனமாடும் வீடியோ சமூக ஊடங்களில் பேசும் பொருளானது. அதேபோல அவர் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடும் காட்சி வைரலானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் கபடி விளையாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்று கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டதுபோல அவருக்கு மருத்துவ சிக்கல்கள் இருப்பதுபோல தெரியவில்லை. சக்கர நாற்காலியில் இருப்பவர் எப்படி துள்ளி குதித்து கபடி ஆட முடியும் என்றும் சிலர் கேள்வியெழுப்பினர். 


Pragya Thakur | ‘நான் கபடி ஆடுவதை வீடியோ எடுத்தவர் ஒரு ராவணன்': சாபம் விட்ட பிரக்யா சிங் தாகூர்!!

இதுகுறித்த தனது மௌனத்தை கலைத்துள்ளார் பிரக்யா சிங். துர்கா பண்டிகையையொட்டி ஆரத்தி எடுக்கத்தான் சென்றதாகவும், அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சில விளையாட்டுவீரர்கள் அழைத்ததன் பெயரிலேயே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அதன் சிறிய வீடியோ க்ளிப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதைப்பார்த்து யாருக்காவது எரிச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஒருவரினுள் இருக்கும் ராவணன்தான் காரணம். சிந்தி சமூகத்தை சேர்ந்த ஒரு சகோதரர்தான் இதை செய்துள்ளார். அவர் என்னுடைய ஒரு பெரிய எதிரி, ஆனால் நான் அவருக்கு எதிரி அல்ல” என தெரிவித்துள்ளார் பிரக்யா சிங். நான் அவருடைய எந்த பொக்கிஷத்தை அவரிடமிருந்து பறித்துக்கொண்டேன் என தெரியவில்லை. ஆனால் ராவணன்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். 

தான் கபடி விளையாடும் வீடியோவை எடுத்தவரை ராவணன் என அழைத்துள்ளார் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். அவருடைய முதுமைக் காலமும், அடுத்த பிறவியும் நாசமாக போகும் என்றும் அவர் சபித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget